மருத்துவ குறிப்பு

எண்ணிலடங்கா நோய்களை போக்கும் துளசி

நம் முன்னோர்கள் முன்பு வீடுகட்டும் போது வாசலின் முன், பின் புறங்களில் துளசி மாடமும் தவறாமல் கட்டி துளசி செடியை வளர்த்து வந்தார்கள். இது ஆன்மிக வழிபாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், ‘கொசுக்கள், விஷபூச்சிகள், பாம்புகள்’என ஜந்துக்கள் வீட்டினுள் நுழைந்து விடாமலும் பாதுகாக்க தான். துளசியில் மருத்துவ மாண்புகள் எண்ணிலடங்கா வண்ணம் பொதிந்து கிடக்கிறது.

குடல்,வாய், வயிறு உபாதைகளை தடுக்க தினசரி துளசி இலைகளை உட்கொண்டால் நிவாரணம் என்பது நிச்சயம். மட்டுமல்லாமல் மேற்படி உபாதைகள் அணுகாமலும் பாதுகாத்து கொள்ளலாம். நாள்பட்ட சொறி, படை, சிரங்குகளை அழிக்க துளசி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து மை போல அரைத்து பற்று போட்டால் போதுமானது. மண்பானை நீரில் துளசி இலைக்கொத்துக்களை போட்டு வைத்து தினசரி பருகி வர சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

குளிக்கும் நீரில் மேற்படியே துளசி கொத்துகளை 12 மணி நேரம் போட்டு வைத்து குளித்து வந்தால் உடல் மிளிரும். துளசி விதைகளை நைசாக அரைத்து உட்கொண்டால் சிறுநீர் கோளாறு அகலும். சபரிமலை சீசன் துவங்கிவிட்ட இத்தருணங்களில் விரதம் மேற்கொள்ள அணிந்து கொள்ளும் துளசி மணி மாலையில் வெளிப்படும் மின் அதிர்வுகள் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. துளசியின் மருத்துவ மாண்பு குடல், வாய், வயிறு உபாதைகளை தடுக்க தினசரி துளசி இலைகளை உட்கொண்டால் நிவாரணம் என்பது நிச்சயம். மட்டுமல்லாமல் மேற்படி உபாதைகள் அணுகாமலும் பாதுகாத்து கொள்ளலாம்.

நாள்பட்ட சொறி, படை, சிரங்குகளை அழிக்க துளசி இலையுடன் எலுமிச்சைசாறு கலந்து மை போல அரைத்து பற்று போட்டால் போதுமானது. மண் பானை நீரில் துளசி இலைக் கொத்துக்களை போட்டு வைத்து தினசரி பருகி வர சர்க்கரை நோய் நம்மை அண்டாது. குளிக்கும் நீரில் மேற்படியே துளசி கொத்துகளை 12 மணி நேரம் போட்டு வைத்து குளித்து வந்தால் உடல் மிளிரும். துளசி விதைகளை நைசாக அரைத்து உட்கொண்டால் சிறுநீர்கோளாறு அகலும்.
thulasi1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button