ஆரோக்கியம் குறிப்புகள்

வீட்டில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. இல்லையேல் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஒரு வீடு வாஸ்துவைப் பின்பற்றினால், அந்த வீட்டில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை வாழ்கிறார்கள். வாஸ்து படி, உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையும் முக்கியமல்ல, உங்கள் வீட்டில் என்ன சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்பது தான் முக்கியம். அதுமட்டுமின்றி வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் குழப்பம். முக்கியமாக வீட்டில் பணம் இல்லாததால் பணப் பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.

நீங்கள் வீட்டில் இந்த சூழ்நிலையில் இருந்தால், உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றும் அதை சரிசெய்ய முயற்சிக்கவும்.

முட்கள் நிறைந்த செடிகள்
வீட்டில் முட்கள் நிறைந்த செடிகளை வைத்திருப்பது நல்லதல்ல. ஒருவேளை வைத்திருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஏனெனில் இந்த வகை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலின் கதவுகளை மூடும். மேலும் இந்த வகை செடிகள் வீட்டில் நிதி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் வீட்டில் இந்த செடிகள் இருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.

சிலந்தி வலை

வாஸ்துப்படி வீட்டின் தூய்மை மிகவும் இன்றியமையாதது. வீட்டை எப்போதும் அசுத்தமாக வைத்திருக்காதீர்கள். வீட்டில் குப்பைகளை தேக்கி வைத்திருக்காதீர்கள். மேலும் வீட்டில் சிலந்தி வலைகள் இருந்தால், அதை உடனே சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் சிலந்தி வலை உள்ள வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது. சுத்தமான வீட்டில் தான் லட்சுமி வாசம் செய்வாள். எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

குழாயில் இருந்து நீர் வடிவது

வீட்டின் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிவது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஒருவருடைய வீட்டில் காரணமின்றி நீர் சொட்டிக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் வறுமை இருக்கும். பண பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவ உங்கள் வீட்டில் குழாயில் இருந்து நீர் வடிந்தால், அதை உடனே சரிசெய்ய முயலுங்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வெளியே இருந்து உள்ளே வீட்டை பெருக்க வேண்டாம்

வீட்டை பெருக்க சரியான வழிகள் உள்ளன. வீட்டை துடைப்பம் கொண்டு பெருக்கும் போது, விளக்குமாறு நேராக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். துடைப்பத்தை எப்போதும் வீட்டின் எதிர்பக்கத்தில் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால், அது வீட்டில் பண நெருக்கடியை உண்டாக்கும். மேலும் வீட்டை பெருக்கும் போது உள்ளே இருந்து தான் வெளியே குப்பைகளை தள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதுடன் எதிர்மறை சக்தியும் வீட்டை விட்டு வெளியேறும். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு இருக்கும்.

துடைப்பம் லட்சுமியின் அடையாளம்

லட்சுமி தேவியின் அடையாளங்களில் ஒன்றாக துடைப்பம் கருதப்படுகிறது. இந்த துடைப்பத்தை ஒருபோதும் காலால் மிதிக்கக்கூடாது. மேலும் இதை எப்போதும் மறைவான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும். வெளியாட்கள் வீட்டிற்கு வந்தால், அவர்களின் கண்ணில் படாத இடத்தில் துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button