அரியருள் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (21). இவர் 16 வயது சிறுமியை காதலித்து வருகிறார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், மகனைக் கண்டிக்கும்படி ஸ்டாலினின் தாயிடம் கேட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை விட்டு சைக்கிளில் வீட்டுக்கு வந்த சிறுமியை ஸ்டாலின் கடத்திச் சென்று கட்டாயப்படுத்தினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related posts
Click to comment