aa45
Other News

கருவை கலைக்க மாத்திரை உட்கொண்ட பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே காரைமேடு வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கும், செந்தூரை அடுத்த சேந்தமங்கலத்தைச் சேர்ந்த ரமணா (23) என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தரணி என்ற நான்கு வயதில் மகளும், ஹரிபிரசாத் என்ற இரண்டு வயதில் மகனும் உள்ளனர்.

 

இந்நிலையில், ரமணா ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். ரமணாவுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளதால், கர்ப்பத்தை கலைக்க தனியார் மருந்தகத்தில் மருந்து சாப்பிட்டுள்ளார். அதிக ரத்தப்போக்கு காரணமாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.aa45

அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், இறந்த பெண் குழந்தையை வயிற்றில் இருந்து அகற்றினர். இதனைத்தொடர்ந்து அதிக ரத்துப் போக்கு ஏற்பட்டதால் ரமணா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரமணா செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையம் மற்றும் ஒடியர்பாளையம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா ட்வீட் – அப்பாவை பற்றி பேசும் முன் இதை யோசித்து பேசுங்கள்:

nathan

புதிய கார் வாங்கிய மதுரை முத்து

nathan

நெப்போலியனின் 60வது பிறந்தநாள்.!வாழ்த்திய குஷ்பூ மற்றும் மீனா.!

nathan

அசத்தலான புகைப்படம்! பிக்பாஸ் ரக்சிதாவா இது? வியப்பில் ரசிகர்கள்

nathan

பெப்சி உமாவுக்கு டார்ச்சர்..!சீண்டிய அரசியல்வாதி யார் தெரியுமா..?

nathan

கவனத்திற்கு! பிரியாணி அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

அடேங்கப்பா! சூப்பர் சிங்கர் மூக்குத்தி முருகனுக்கு இவ்வளவு அழகிய மனைவியா?

nathan

இதை நீங்களே பாருங்க.! தலையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு ஒரு மாதிரியாக போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்.!

nathan

திருமண நாளை கொண்டாடிய சுஜிதா தனுஷ்..

nathan