செட்டிநாட்டுச் சமையல்

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா
தேவையான பொருட்கள் :

காளான் – அரை கிலோ
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – இரண்டு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – இரண்டு
கறிவேப்பில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன்
தனியா தூள் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
மிளகு தூள் – அரை டீஸ்பூன்
சீரக தூள் – அரை டீஸ்பூன்
சோம்பு தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

* பின், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, மிளகு தூள், சீரக தூள், சோம்பு தூள், கரம் மசாலா சேர்த்து கலந்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி கொதிக்கவிடவும்.

* பிறகு அதில் காளான் சேர்த்து வதக்கவும். காளான் 10 நிமிடத்தில் வெந்து விடும்.

* காளான் நன்றாக சுருங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

* சூப்பரான சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா ரெடி.201703011343500163 chettinad mushroom masala SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button