ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

சமையல் குறிப்பு டிப்ஸ்

# மைசூர்பாகு, தேங்காய் பர்பி ஆகியவற்றைச் செய்யும் போது சமையல் சோடாவைச் சேர்க்கக் கூடாது. அப்படிச் சேர்த்தால் துண்டு போட வராமல் தூள் தூளாக உடையும்.

# மிக்சருக்காக அவல் பொரிக்கும்போது சிதறிப் போகும். இதைத் தவிர்க்க கைப்பிடியோடு கூடிய வடிகட்டியில் அவலைப் போட்டு, கொதிக்கும் எண்ணெயில் முக்கிப் பொரிக்க வேண்டும்.KT

# ரவை உருண்டை, பயத்த மாவு உருண்டை செய்யும் போது பொடித்த சர்க்கரையையும் நெய்யையும் நன்றாகக் குழைத்து ஒரு தட்டில் தடவுங்கள். பின் மாவை அதில் போட்டுக் கலந்து உருண்டை பிடித்தால் மிகவும் சுவையாக இருக்கும்..

# பட்சணம் செய்யும் போது எண்ணெய் பொங்காமல் இருக்க ஒரு சொட்டு வினிகர் விட வேண்டும்..

# அவியல் செய்யும்போது அரைத்த தேங்காய் விழுதைத் தயிரில் கலக்காமல் வேகவைத்த கறிகாய்களுடன் சேர்த்துப் பிறகு தயிர் சேர்த்தால் அவியல் நீர்த்துப் போகாது.

# வாணலியை லேசாக சூடாக்கி அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாகப் புரட்டிய பிறகு தோல் உரித்தால் சுலபமாக உரிக்க முடியும்.

# தேங்காய்த் துவையல் அரைக்கும்போது சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

# சப்பாத்தி மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை மசித்துக் கலந்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி பூப்போல் இருக்கும்.

# சூடான பாலில் வாழைப்பட்டையைப் போட்டு ஒரு டீஸ்பூன் தயிர் ஊற்றினால் விரைவாக தயிராகிவிடும்.

# தயிர் புளிக்காமல் இருக்க அதில் சிறு துண்டு தேங்காயைப் போட்டுவைக்கலாம்.

# தண்ணீரில் ஒரு டீஸ்பூன் புளித்த தயிர் அல்லது மோரை தண்ணீரில் கலந்து அதில் வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கிப் போட்டால் நிறம் மாறாது.

# வெண்டைக்காய் சீக்கிரம் வதங்கவும் கொழகொழப்புத் தன்மை குறையவும் அதில் ஒரு டீஸ்பூன் தயிர் சேர்க்கலாம்.

# அவரைக்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், சுண்டைக்காய், மிளகாய் ஆகியவற்றில் வற்றல் போடும் போது காய்ந்த பிறகு புளித்த தயிரில் ஊற வைத்து மீண்டும் காயவைத்தால் ருசி கூடும்.

# வெண்ணெயை உருக்கும்போது ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்தால் சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

# நன்கு புளித்த தயிரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் முடி வளர்வதுடன் பளபளப்பாகவும் இருக்கும். பொடுகு குறையும்.

# கருணைக் கிழங்கைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சமைத்தால் சாப்பிடும்போது அரிப்பு இருக்காது.

# வெள்ளிப் பொருட்களைப் புளித்த தயிரில் ஊறவைத்துச் சுத்தம் செய்தால் பளீரென இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button