29.5 C
Chennai
Tuesday, May 21, 2024
couples
பெண்கள் மருத்துவம்கர்ப்பிணி பெண்களுக்கு

தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் கட்டாயம் இத படிங்க!…

பெண்கள் கருவுறுதலுக்கு முக்கியமாக இருப்பது உயிரணுக்கள். இந்த உயிரணுக்கள் பெண்களின் கருப்பைக்குள் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதை பொறுத்தே பெண்கள் கருவுறுதல் உறுதி செய்யப்படுகிறது.

உயிரணுக்களின் ஆயுட்காலத்தை பொருத்தும்., அந்த உயிரணுக்கள் எந்த இடத்தில் வெளிப்படுகிறது என்பதை பொறுத்தே ஆயுட்காலமானது உறுதி செய்யப்படும்.

இந்த விசயத்திற்கு எடுத்துக்காட்டாக., சுய இன்பம் கொள்ளும் ஆண்களுக்கு உயிரணுக்கள் வெளியே வந்த உடன் இறந்துவிடும்.,

பெண்களின் உடலுக்குள் உயிரணுக்கள் சென்றாலும் அவற்றின் ஆயுட்காலமானது தீர்மானிக்க இயலாத ஒன்றாகும்.

மேலும்., பெண்களின் உடலில் உயிரணுக்கள் எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும் என்பதை இனி காண்போம்.

couples

பெண்கள் கருத்தரிக்க சரியான ஒரு உயிரணு போதுமானது. ஏனெனில்., தாம்பரத்தியம் கொள்ளும் போது வெளியே பல கோடிக்கணக்கான உயிரணுக்கள் வெளியே வரும்.

அந்த சமயத்தில் ஆரோக்கியமான உயிரணு பெண்ணின் பிறப்புறுப்பின் வழியாக பாலோப்பியன் குழாயினை கடந்து ஒரு உயிரணு அல்லது இரண்டு உயிரணுக்கள் செல்கிறது.

அதனை பொறுத்தே குழந்தையின் எணிக்கையும்., கருத்தரித்தலும் தீர்மானிக்கப்படுகிறது.

இறுக்கமான ஆடைகளை அணியாமல் இருப்பது., புகை பழக்கம் மாற்றும் மது பழக்கத்தை அறவே வெறுப்பது., உடலுக்கு சத்தான சாப்பாடு மற்றும் பழவகைகள்.,

காய்கனிகளை உண்பது மற்றும் உடல் எடையை சீராக பராமரிப்பது போன்றவை உயிரணுக்கள் தரத்தை மேம்படுத்த உதவும்.

பெண்ணுறுப்பிற்குள் உயிரணுக்கள் சென்ற 24 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரை உயிரணுக்களின் வயானது உயிருடன் இருக்கும்.

அவ்வாறு உயிருடன் இருக்கும் உயிரணுக்கள் மட்டுமே கருத்தரிக்கும் ஆற்றலை கொண்டது.

பெண்ணின் கருப்பைக்குள் தேவையான அளவிற்கும் வெப்பமும்., திரவமும் இருக்கும் பட்சத்தில் கருவுறுதலுக்கான செயல்பாடுகள் நடக்கும்., தேவையான அளவு வெப்பம் மற்றும் திரவம் இருக்கும் பட்சத்தில் சுமார் 5 நாட்கள் வரை உயிரணுக்கள் உயிருடன் இருக்கும்.

உயிரணுக்களின் ஆயுட்காலமானது வெளிப்புறம் என்று பார்க்கும் பொது மிகமிக குறைவுதான் என்று கூறவேண்டும். மனித உடலின் வெப்பம் இல்லாத இடங்களில் இருக்கும் உயிரணுக்கள் சில நேரம் கூட உயிருடன் இருக்க இயலாது.,

அந்த வகையில் இருக்கும் உயிரணுக்கள் வெளியே வந்த உடனே இறந்துவிடும் அல்லது அந்தந்த சூழ்நிலையை பொறுத்து சில நிமிடங்கள் உயிருடன் இருக்கலாம்.

ஆரோக்கியமான உணவுகளை முடிந்த வரையில் ஆண்களும்., பெண்களும் கடைபிடிக்கும் பட்சத்தில் நல்ல பலனை காண இயலும்.

குறிப்பாக ஆண்கள் சுய ஒழுக்கத்துடன்., தேவையான உடலுக்கு உகந்த காய்கனிகளை எடுத்துக்கொள்வது நல்லது.

மேலும் குறிப்பாக இன்றைய இளைய சமுதாயத்திடம் உள்ள பழக்கங்களில் பெரும்பாலானவை மடிக்கணினியை மடியில் வைத்தபடி உபயோகம் செய்வதுதான்.

“வை-பை” வசதியுடைய மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகம் செய்வது உயிரணுக்களின் மீது அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் குளிக்கும் போது இயன்ற அளவிற்கு குளிர்ந்த நீரை உபயோகம் செய்வது நல்லது.

Related posts

முப்பது பிளஸ்சில் முக்கியம்!

nathan

மது குடிக்கும் மங்கைகள் என்ன ஆவார்கள்?

nathan

பெற்றோரின் இரத்த வகை குழந்தை பிறப்பில் ஏற்படுத்தும் பாதிப்புகள்

nathan

ஒன்பதாம் மாதத்தில் கர்ப்பிணிகளின் உடலில் நடைபெறும் நிகழ்வுகள்!!!

nathan

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுமா?

nathan

குழந்தை வரம் பெற சில எளிய ஆலோசனை , கை வைத்திய முறைகள்

nathan

வலி நீக்கும் ஹிப்னோபெர்த்திங் பிரசவம்!

nathan

திருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா?

nathan

மார்பை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க.!!

nathan