சைவம்

சுவையான கேரட் பொரியல்

கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது. அதிலும் அந்த கேரட்டை பச்சையாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. ஆனால் அந்த கேரட்டை தேங்காய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். மேலும் இந்த சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும்.

இங்கு கேரட் பொரியலை எளிமையான செய்முறையில் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

கேரட் – 4-5

தேங்காய் – 1/2 கப் (துருவியது)

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

பச்சை மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கேரட்டை நன்கு நீரில் கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டூம்.

பின்பு அதில் கேரட்டை சேர்த்து, 1/4 கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பிறகு தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி!!!

Related posts

கம்பு தயிர்சாதம் செய்வது எப்படி

nathan

பட்டாணி குருமா

nathan

கார்ன் குடைமிளகாய் கிரேவி

nathan

கூட்டுக்கறி

nathan

பார்லி வெஜிடபிள் புலாவ்

nathan

குதிரைவாலி எள் சாதம்

nathan

செட்டிநாடு பன்னீர் மசாலா

nathan

கொப்பரி பப்பு புளுசு

nathan

கறிவேப்பிலை மிளகு குழம்பு

nathan