32.2 C
Chennai
Wednesday, May 29, 2024
1 dehydrationbody 1592464992 1604986179
ஆரோக்கியம் குறிப்புகள்

குளிர்காலத்தில் உடல் வறட்சி அடைவதைத் தடுக்க டிப்ஸ்…!

குளிர்காலம் நெருங்கிவிட்டது. குளிர்காலத்தைப் பற்றி நினைக்கும் போது, ​​​​அதிக குளிர், பனி மற்றும் வறண்ட வானிலை பற்றி நாம் நினைக்கிறோம். குளிர்காலத்தில் அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சனை நீரிழப்பு. இதன் பொருள் உடல் நீரிழப்புடன் உள்ளது. எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் குளிர்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அனைவருக்கும் பெரும் சவாலாக உள்ளது.

பொதுவாக, குளிர் காலத்தில் உங்களுக்கு தாகம் குறைவாக இருக்கும். அதனால்தான் மக்கள் தண்ணீர் அல்லது திரவங்களை அடிக்கடி குடிப்பதில்லை. மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்கவும். இயற்கையாகவே உடலில் நீர்ச்சத்து குறைகிறது. நீரிழப்பு ஏற்படுத்தும்.

 

குளிர்காலத்தில் வியர்வை குறைவாக இருந்தாலும், உங்கள் உடலுக்குத் தேவையான நீர் தானாகவே கிடைக்கும்.  அதனால்தான் குளிர்காலத்தில் கூட போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம்.

 

குளிர்காலத்தில் நீரிழப்பு தோல் பிரச்சினைகள், சோர்வு, தசை பதற்றம், தலைவலி மற்றும் பிற நோய்களை ஏற்படுத்துகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து, எரிச்சலையும் எரிச்சலையும் உண்டாக்கும்.

நீரிழப்பின் அறிகுறிகள்
நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக சிறுநீர் அடர்த்தியான மஞ்சள் நிறத்திற்கு மாறுதல், தலைச்சுற்றல், தேவையில்லாத எரிச்சல் உணர்வு மற்றும் உதடுகளில் வெடிப்புகள் ஏற்படுதல் போன்றவை நமது உடலில் போதுமான நீரில்லை என்பதை உணர்த்தும் காரணிகள் ஆகும்.

குளிர்காலத்தில் நமது உடலை எவ்வாறு நீர்ச்சத்துடன் வைத்திருக்கலாம்?
குளிர்காலத்தில் நமது உடலை எவ்வாறு நீர்ச்சத்துடன் வைத்திருக்கலாம்?
பொதுவாக குளிர்காலத்தில் உடலுக்குத் தேவையைான அளவு தண்ணீரை நாம் குடிப்பதில்லை. அதனால் நமது உடலில் மிக எளிதாக நீரிழப்பு ஏற்பட்டு நாம் பாதிப்படைகிறோம். எனவே இக்காலத்தில் நம்மால் போதுமான தண்ணீரை குடிக்க இயலவில்லையானால், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சூப் செய்தோ அல்லது சமைக்காமலோ அதிக அளவு உண்ணலாம். இந்தக் கட்டுரையில் குளிர்கால நீரிழப்பைத் தடுக்க என்னென்ன உணவுப் பொருட்களை உண்ணலாம் என்று பார்க்கலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

குளிர்காலத்தில் ஏற்படும் உடல் நீரிழப்பைத் தடுக்க அதிக அளவில் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும். அவற்றை சாறு பிழிந்தோ அல்லது சூப் செய்தோ அல்லது சாலட் செய்தோ சாப்பிடலாம். மேலும் அவற்றை சமைக்காமலும் சாப்பிடலாம்.

ஆரஞ்சுப் பழம்

தண்ணீரில் ஒரு புதினா இலை அல்லது ஆரஞ்சுப் பழத்தோல் சேர்த்து குடித்தால் அது மணமாகவும் அதே நேரத்தில் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். ஏனெனில் ஆரஞ்சுப் பழத்தில் 86 விழுக்காடு நீர் இருக்கிறது. அதோடு வைட்டமின் சி சத்தும் அதில் நிறைந்திருக்கிறது. மேலும் ஆரஞ்சுப் பழம் நம்மை நீர்ச்சத்தோடு வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நமது தசைகள், எலும்புகள், தமனிகள் மற்றும் தோல் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் ஒரு சத்து நிறைந்த உணவு மட்டும் அல்ல, மாறாக நமது உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுத்து தேவையான நீர்ச்சத்தைத் தருகிறது. ஏனனில் ஒரு குவளை முட்டைக்கோஸின் சாற்றில் 59 மிலி தண்ணீர் இருக்கிறது. அதோடு முட்டைக்கோஸில் அதிக அளவில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் இருக்கின்றன. அதனால் இவை நமது உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தையும் தரும்.

தக்காளி

தக்காளியில் 95 விழுக்காடு தண்ணீர் உள்ளது. எனவே தக்காளியை சமைக்காமலோ அல்லது சூப் மற்றும் சாலட் செய்தோ சாப்பிடலாம். மேலும் தக்காளியில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருப்பதால் அது நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

கீரைகள்

கீரைகளில் 93 விழுக்காடு தண்ணீர் உள்ளது. அதனால் கீரைகள் நம்மை நீர்ச்சத்துடன் வைத்திருக்கும். மேலும் கீரைகள் நமக்கு போதுமான இரும்புச்சத்தையும் வழங்குகின்றன. அதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பையும் வலுப்படுத்துகின்றன. குளிர்காலத்தில் பயணம் செய்யும் போது தண்ணீரை எடுத்துச் செல்வது பயனளிக்கக்கூடிய ஒன்றாகும். அதனால் போதுமான அளவு பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீர் அருந்தி நீரிழப்பைத் தடுக்கலாம்.

சூடான பானங்கள்

சூடான பால், தேனீர் மற்றும் சூப் போன்ற பானங்கள் நம்மை இதமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நீரிழப்பைத் தடுக்கின்றன. நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. மேலும் நமது சுவாசக் குழாயை சுத்தம் செய்கின்றன. அதே நேரத்தில் காற்று ஏற்றப்பட்ட பானங்கள், மதுபானம் அல்லது போதை மருந்துகள் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். அவை நீரிழப்பை அதிகரித்து வறட்சியை ஏற்படுத்தும். தண்ணீர் நமது வாழ்க்கையின் அன்னையாகவும், சாரமாகவும், அளவுகோலாகவும், வழியாகவும் இருக்கிறது.

தயிர்

தயிர் நீரின் ஆதாரமாக இருப்பதோடு அல்லாமல் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவும் இருக்கிறது. ஒரு குவளை தயிரில் 75 விழுக்காடு தயிர் இருக்கிறது. மேலும் தயிரில் முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு தயிர் உடல் எடையை குறைக்கவும், நமது உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.

எனவே மேற்சொன்ன இந்த உணவுகளை இந்த குளிர்காலத்தில் சீரான அளவில் உண்டு வந்தால் நாம் நீரிழப்பைத் தடுத்து, நமது உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க முடியும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எக்காரணம் கொண்டும் இந்த ராசிக்காரர்களை மட்டும் ரொம்ப நம்பாதீங்க….

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் ஆண்களிடம் உள்ள பழக்கவழக்கங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் தடவுவதால் ஏற்படும் பலன்கள்..!!

nathan

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டத்தைப் பெற எளிய வழி இதோ

nathan

அக்குளில் வரும் வலிமிக்க கட்டிகளைப் போக்க சில டிப்ஸ்…

nathan

இந்த 5 விஷயத்த மட்டும் செய்ங்க… உங்க காதலருக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் !…..

nathan

உங்களுக்கான அதிர்ச்சி எச்சரிக்கை! காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா?

nathan

உடல் எடையைக் வேகமாக குறைக்க வேண்டுமா : நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

Daily சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

nathan