திருப்பூர்-மங்கலம் சாலையில் பூச்சக்காட்டில் செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி, திருவீரக் பூஜை நடைபெற்றது. இந்த பூஜை முடிந்ததும் 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென கோவில் பிரகாரத்திற்குள் நுழைந்து தலைமறைவானார். இதை பார்த்து சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே கோவில் பூசாரிகளும், பக்தர்களும் கருவறைக்குள் நுழைந்து அங்கு மறைந்திருந்த பிடித்து வெளியே இழுத்து வந்து தர்ம அடி கொடுத்தனர். அந்த இளைஞன் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தான். தன்னை யாரோ அரிவாளால் வெட்ட வந்ததால் உயிருக்கு பயந்து கோயிலுக்குள் ஒளிந்து கொண்டதாக அபேபாது கூறினார்.
இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மத்திய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஏகவிரிடம் விசாரணை நடத்த வந்தனர். பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருப்பூர் மங்கலம் ரோடு, பரக்காடு நகர், 3வது தெருவில் வசிக்கும் ரவிக்குமார் மகன் கோகுல், 26, என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும், திருட்டு, தாக்குதல் உட்பட, ஏழு வழக்குகள் பதிந்ததும் தெரியவந்தது.
இதனால் போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். கஞ்சா போதையில் ஒரு வாலிபர் கோவில் கருவறைக்குள் நுழைந்து அவரை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.