30.5 C
Chennai
Friday, May 17, 2024
201612311442079931 parents criticized way to child SECVPF
மருத்துவ குறிப்பு

பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்

பெற்றோர் குழந்தைகள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் எந்த முறையில் கண்டிக்கலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.

பெற்றோர்கள் எந்த முறையில் குழந்தையை கண்டிக்கலாம்
பெற்றோர்கள் குழந்தைகளை ஏசுவதும், பேசுவதும் உருட்டி மிரட்டி வளர்ப்பதும், அடித்து துன்புறுத்துவதும் பொதுவாக காணப்படும் விஷயங்கள் இவையணைத்தும் சரிதானா? குழந்தைகளை இப்படியெல்லாம் கண்டித்து வளர்ப்பது அவசியம்தானா? என்ற கேள்வி மனதில் எழலாம்.

குழந்தைகளின் நடத்தைகளில் தவறான, கெட்ட நடத்தை எவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஓர் குழந்தை தனக்கு பிடித்தமான ஒன்றை கேட்டு பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பது, படிக்காமல் எப்போதும் விளையாடிக்கொண்டே இருப்பது, ஐஸ்கிரிமும் சாக்லேட்டும் அதிகமாக உண்பது ஆகியவையெல்லாம் கெட்ட நடத்தைகள் அல்ல.

இவையெல்லாம் குழந்தைகளுக்கு பிடித்தவை. அதனால் அவைகளை குழந்தைகள் அதிகமாக செல்கின்றன. இவற்றைக் குறைக்க குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமே தவிர கண்டிப்பு தேவையில்லை.

உதாரணமாக அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதனால் பல்லுக்கு உண்டாகும் கெடுதல் என்ன என்று குழந்தைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வந்தால் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு குழந்தை தானாகவே சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளும் மாறாக பெற்றோர்கள் அடித்துத் திருத்த நினைத்தால் சாக்லேட் மீது ஆசை அதிகமாகி குழந்தை ஏராளமான சாக்லேட்டுகளை உண்க ஆரம்பித்துவிடும். சில வேளைகளில் பெற்றோர்களுக்கு தெரியாமல் உண்கவும் செய்யும். பொய் பெசுவதும் மறைப்பதும், திருட்டுத்தனமும் இவ்வாறுதான் தொடங்குகிறது.

பிறர் பொருளை திருடி வைத்துக் கொள்வது, பிற குழந்தைகளை அடிப்பது, கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்றவைகள் கெட்ட நடத்தைகளின் வகையில் அடங்கும். இக்கெட்ட நடத்தைகளை குழந்தை எங்கேயிருந்து பழகிக் கொண்டது? பெற்றோர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றவர்களிடமிருந்தே குழந்தை இந்நடத்தைகளை கற்றுக் கொள்கிறது. இவைகளை கண்டித்து திருத்த வேண்டிய கடமை பெற்றோர்களுக்கு உண்டு.201612311442079931 parents criticized way to child SECVPF

Related posts

தண்ணீர் அதிகமாக குடித்தால் ஆபத்தா?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! குளிக்கும் போதே சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிஞ்சிகோங்க

nathan

அந்த நாட்களில் அதிகரிக்குமா ஆஸ்துமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இயற்கையாக மாதவிடாயை தள்ளிப் போடலாம்! என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

nathan

இந்த அறிகுறிகள் இருந்தா அது கல்லீரல் நோயாம்..

nathan

பெண்களே கூர்மையான அறிவாற்றல் வேண்டுமா? இந்த டிப்ஸ்களை முயற்சி செய்யுங்கள்…

nathan

ஒரே வாரத்தில் தொப்பை காணாம போக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்

nathan