29.5 C
Chennai
Wednesday, May 22, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

பொடுகுத் தொல்லையா?

10-1370849439-2பலரையும் அவதிப்படுத்துவது பொடுகுத் தொல்லை. இதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி? இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து, அரைமணி நேரம் வைக்கவும்.

பின் சீயக்காய் தேய்த்துக் கழுவி விடவும். கடைசியாக தண்ணீர் விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்துக்கு இரண்டு முறை பச்சைப் பயிறு மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளிக்கவும். இவ்வாறு செய்தால் பொடுகு மறைந்துவிடும்.

மேலும் மறுபடி வராமல் இருக்க, ஊமத்தை இலையால் காய்ச்சப்பட்ட துர்தூரபத்ராதி தைலத்தைப் பயன்படுத்தவும். கேரள மாநிலத்தில் சில பெண்கள் தேங்காய்ப் பாலை தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளர்கிறது.

எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் அதைப் போல பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடிகளை தேங்காய் எண்ணையில் சம அளவாகக் காய்ச்ச வேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டித் தலைக்கு உபயோகிக்கலாம்.

அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சினால் அது முடி வளர வைக்கும் நல்ல தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியையும் தலைக்குத் தேய்த்துக்குளிக்கலாம்.

Related posts

தலை முடிக்கான ஹென்னாவை எப்படி தயாரிப்பது?

nathan

முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய 9 மூலிகைகள் !…..

nathan

இதோ எளிய நிவாரணம்! நரைமுடிக்கு ‘குட்-பை’ சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

nathan

தலைமுடி பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வீட்டிலேயே உங்கள் கூந்தலை புதுப்பிக்க சூப்பர் டிப்ஸ்..!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

nathan

உங்களுக்கு பொடுகு பிரச்சனை போக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..

sangika