face4
முகப் பராமரிப்புஅழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

முகம் மிகவும் மிருதுவாக எளிய அழகு குறிப்புகள்!!

கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும். இறந்த செல்கள் நீங்கி புது செல்கள் தோன்றுவதினால், முகம் புத்துணர்வுடன் இருக்கும்.

face4

இரண்டு லிட்டர் நீரினில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு, 10 வேப்ப இலைகள், இட்டு நன்றாக ஆவி வருமளவு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதிக்க வைத்த நீரினை கொண்டு சற்றும் தாமதிக்காமல் ஆவி பிடிக்க வேண்டும்.

இது போல 20 நிமிடங்களுக்கு குறையாமல் ஆவி பிடிக்க வேண்டும். இதில் உள்ள வேம்பு இறந்த செல்களை நீக்க உதவுகிறது. மேலும், புதிய செல்களை தோற்றுவிக்கிறது. நாம் முகத்தில் தினமும் உபயோகிக்கின்ற க்ரீம் மற்றும் பவுடர் பூச்சுகளினால் சருமத்தில் உள்ள சுவாசிக்கும் துளைகளை அடைத்து விடுகின்றன. இதுவே முகப்பருக்கள் ஏற்பட முக்கிய காரணமாகும்.

இவ்வாறு, ஆவி பிடிக்கும் பொழுது அந்த துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுவாசிக்க தொடங்குவதனால் புத்துணர்வுடன் காணப்படுகின்றது. வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த ஆவிபிடித்தலை செய்யும் பொழுது சருமம் புது பொலிவுடன் இருக்கும்.

இந்த எலுமிச்சை முகத்திற்கு பளிச்சென்ற தோற்றத்தை கொடுக்கும்.
ஆவி பிடித்தவுடன் முகத்தை காட்டன் துணி வைத்து துடைத்து எடுத்த பின் பால் அல்லது சுத்தமான தயிர் கொண்டு முகத்தை மசாஜ் செய்யலாம், இது முகத்திற்கு புரோட்டின் சத்தினை கொடுக்கின்றது. அதிக படியான பொலிவினை பெற உதவுகிறது.

குறிப்பு: ஜலதோஷம் அல்லது குளிர்ந்த உடலை கொண்டுள்ளவர்கள் இதனுடன் துளசி இல்லை அல்லது தூதுவளையை சேர்த்து கொள்ளலாம்.

Related posts

உங்களுக்கு எண்ணெய் வழியும் இமைகளா? அதை சீராக்க உதவும் 6 குறிப்புகள்!

nathan

முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்

nathan

மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க டிப்ஸ்

nathan

கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது…….

sangika

சன் ஸ்கிரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் பெண்கள் கவனிக்கவேண்டியவை

nathan

சரும வறட்சியை போக்கும் பால்

nathan

பொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட)

nathan

குழந்தையை போன்ற மிருதுவான சருமம் பெறவேண்டுமா? இதெல்லாம் ட்ரை பண்ணலாமே

nathan

சூப்பர் டிப்ஸ் !உங்கள் முகத்தின் கருமையை நீக்க வேண்டுமா? அப்ப இத படியுங்க!

nathan