தலைமுடி சிகிச்சை

முடி கொட்டுவது நிற்க

கசகசாவை பாலில் ஊற வைத்து அரைத்து அத்துடன் பாசி பருப்பு மாவை கலந்து தேய்த்து வரமுடி உதிர்தல் நிற்கும்.

நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாக நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிராது. செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடிஉதிராது. அத்துடன் கூந்தல் கருமையாக மாறும்.

முட்டையின் வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது நின்று விடும்.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும். முடிகொட்டுவது நின்றுவிடும். அது மட்டும் அல்ல முடக்கத்தான் கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF %E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81 %E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2 %E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button