வெண்பொங்கல்
பச்சரிசியையும் பயத்தம் பருப்பையும் ஒன்றாகப் போட்டு, தண்ணீர் விட்டுக் களையவும். பிறகு ஏழு ஆழாக்கு தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அடுப்பில் வைத்து, காய்ந்ததும் முந்திரியை ஒடித்துப் போட்டு பொன்நிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”1″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
பிறகு வாணலியில் மிளகு, சீரகத்தை வறுத்து எடுத்துக்கொண்டு, இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி, அதையும் தனியாக வறுக்கவும். மிளகு, சீரகத்தை பொடி செய்து கொள்ளவும். குக்கரில் வெந்திருக்கும் அரிசி, பருப்பு கலவையை வாணலியில் போடவும். (அடுப்பில் வைக்க வேண்டாம்) அத்துடன் உப்பு, மிளகு, சீரகத்தூள், நெய், கருவேப்பிலை, முந்திரி எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்..