ஆரோக்கிய உணவு

அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் உகாதி பச்சடி

உகாதி தினத்தன்று செய்யப்படும் ஒரு சிறப்பான உணவு தான் உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும். இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக

வாழ்ந்திட, வாழ்க்கையின் அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும்.

இப்போது அந்த உகாதி பச்சடியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

மாங்காய் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

வேப்பம்பூ – 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம் – 1 கப் (தட்டியது)

தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்

புளி சாறு – 4 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 3 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, புளி சாறு ஊற்றி, அத்துடன் மாங்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.

மாங்காயானது நன்கு வெந்ததும், அதில் வெல்லம், மிளகாய் தூள், உப்பு, வேப்பம்பூ, தேங்காய் துண்டுகள் சேர்த்து 8-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், உகாதி பச்சடி ரெடி!!!

 

More UGADI News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button