கற்றாழையின் சரும பராமரிப்பு
முகப்பருவை குறைக்க கற்றாழையை தினமும் தடவி வந்தால் பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.
வறட்சியான சருமம் இருந்தால் அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால் அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவி பின் மேக்-கப் போட்டால் நன்றாக இருக்கும்.
உடல் எடை அதிகரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும். அதனை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.