முகப் பராமரிப்பு

ஆபத்தாகலாம்!! மஞ்சளை பெண்கள் அதிகளவில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

மஞ்சள் ஆனது, அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. ஆரோக்கியம் தொடர்பான பல நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மஞ்சள் அதிக அளவில் பயனளிக்கிறது.

மஞ்சளை காயங்களில் தடவினால், காயங்கள் விரைவாக குணமாகும். முழங்கால் வலிக்கான சிகிச்சை, இதய நோய் சிகிச்சை உட்பட பல சிகிச்சை முறைகளில் மஞ்சள் கணிசமாக பயன்படுத்தப் படுகின்றது.

மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுகின்றது.

ஆனால், மஞ்சள் (Turmeric) சில கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மஞ்சளை எப்போதும் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். மஞ்சள் சிறந்த முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் கர்ப்ப காலத்தில் இதை குறைந்த அளவுகளிலேயே பயன்படுத்த வேண்டும்.

இதை அதிக அளவில் உட்கொள்வது மாதவிடாயை ஊக்குவிக்கும், கர்ப்பத்தில் (Pregnancy) ஆபத்துகளை உண்டு பண்ணும்.

மேலும், மஞ்சள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் இதன் அளவில் கர்ப்பிணி பெண்கள் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button