ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே இந்த 9 கண்ணுல ஒன்னு சூஸ் பண்ணுங்க, உங்கள பத்தின இரகசியம் நாங்க சொல்றோம்!

பொம்மை கடையில் இருக்கும் எல்லா பொம்மைகளும் நல்லவை தான். துணிக் கடையில் அடுக்கி வைத்திருக்கும் அனைத்து டிசைன் உடைகளும் நல்ல தரத்துடன் தான். நமக்கு பிடிக்காத டிசைன், வேறு நபருக்கு மிகவும் பிடித்திருக்கும். நான் தேர்வு செய்யாத ஒரு உடையை ஒருவர் தேடி, தேடி வாங்குவார். இதற்கு எல்லாம் என்ன காரணம்? நமது சொந்த விருப்ப வெறுப்புகள்.

ஒரு நபரின் சொந்த விருப்ப, வெறுப்பை வைத்து அவர் எப்படிப்பட்ட நபராக இருப்பர் என்று கூறிவிட இயலும் அல்லவா. அப்படிப்பட்ட டெஸ்ட் தான் இது. இது போன்ற பர்சனாலிட்டி டெஸ்ட்கள் நமது தமிழ் போல்ட்ஸ்கை தளத்தில் நாம் முன்னரே அதிகம் கண்டிருக்கிறோம்.

இது கொஞ்சம் வித்தியாசமானது. முதலில் மேல உள்ள படத்தில் இருக்கும் ஒன்பது கண்களில் ஒரு கண்ணை (உங்களை பிடித்த) தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு அந்த கண் உங்களை பற்றியும், உங்கள் குணாதிசயங்கள் பற்றியும் என்ன கூறுகிறது என்று கீழேத் தனித்தனியாக கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் மூலம் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

#1

நீங்கள் ஒரு வெளிப்படையான நபர், உங்களை சுற்றி இருக்கும் நபர்களை அதிகம் நேசிப்பீர்கள். மற்றவர்களின் உணர்வுகள் மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் அன்புக்கும், அக்கறைக்கும் உரித்தான அனைவரும் நல்லவர்கள் என்று நம்பும் நபர் நீங்கள். ஒரு நல்ல நண்பனாக உதவும் போதெல்லாம் கைக்கொடுத்து தூக்கிவிட நீங்கள் துணை நிற்பீர்கள்.

#2

கண்ணும் கருத்துமாக நடந்துக் கொள்பவர் என்ற சொற்றொடர் உங்களுக்கு பொருந்தும். மற்றவர் மீதான அக்கறை அதிகம் இருக்கும். மற்றவரின் துயரத்தை உங்க தோள்களில் சுமப்பீர்கள். உங்கள் செயல்கள் உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் சமூகத்திற்கும் ஒரு மாற்றம் கொண்டு வர உழைப்பீர்கள். உங்களை நண்பா என்று யாரேனும் அழைத்துவிட்டால், அவருக்காக ஒரு நல்லதை மட்டுமே செய்ய முனைவீர்கள். உங்களை போன்ற மக்கள் தான் உலகுக்கு நிறைய தேவை.

#3

உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணமே இன்றி ஏக்கமும் கவலையும் கொண்டிருப்பீர்கள். உங்களை ஆண்டவன் அதிகமாக சோதிக்கிறான் என்று புலம்பியே நிறைய நேரத்தை விரயம் செய்வீர்கள். எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகம் இருக்கும். உங்கள் வாழ்வில் கெட்டது நடக்கும் அளவுக்கு ஈடாக நல்லது நடப்பதில்லை என்ற கருத்து கொண்டிருப்பீர்கள்.

#4

உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவாக இருக்கும். காரணமே இன்றி ஏக்கமும் கவலையும் கொண்டிருப்பீர்கள். உங்களை ஆண்டவன் அதிகமாக சோதிக்கிறான் என்று புலம்பியே நிறைய நேரத்தை விரயம் செய்வீர்கள். எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகம் இருக்கும். உங்கள் வாழ்வில் கெட்டது நடக்கும் அளவுக்கு ஈடாக நல்லது நடப்பதில்லை என்ற கருத்து கொண்டிருப்பீர்கள்.

#5

நீங்கள் ஒரு முரணான நபர். உங்களது உணர்வு நிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். எப்போது நீங்கள் சிரித்து பேசுவீர்கள். எதற்கு உங்களுக்கு கோபம் வரும் என்று கணிப்பது கடினம். உங்கள் மனதை படிப்பதோ, உங்களை குறித்து முழுமையாக அறிந்துக் கொள்வதே கடினம். உங்களை பற்றி அறிவது என்பது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலான காரியமாக இருக்கும். ஏன், உங்களாலேயே உங்களை பற்றி முழுமையாக அறிந்துக் கொள்ள இயலாது.

#6

நீங்கள் உணர்ச்சிப்பூர்வமான நபர். உங்கள் கண்காணிப்பில் இருந்து எதுவும் தப்பிவிட முடியாது. உங்கள் திறமைகளில் சிறப்பானது கண்காணிக்கும் திறன் என்று கூறலாம். ஒருவரிடம் பேசி, பழகுவதில் நீங்கள் வல்லவர். உணர்வு ரீதியாக பேசி ஒருவரை உங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். ஆனால், உங்களை சுற்றி இருக்கும் நபர்களை ஒரு எல்லைக்கோடு வரைந்து அதை தாண்டி உங்களை நெருங்க விடாமலும் பார்த்தும் கொள்வீர்கள். உங்கள் கண்காணிப்பு திறனை கண்டு மற்றவர்கள் நீங்கள் ஒரு மேஜிக் கலைஞரா என்று கூட வியக்கலாம். உங்களால் ஒரு செயலை எளிதாக அவதானிக்கவும் முடியும்.

#7

நீங்கள் ஒரு துடிப்பான நபர். தனிச்சையாகவும், துரிதமாகவும் ஒரு செயலை செய்வதிலும், ஒரு முடிவை எடுப்பதிலும், சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வதிலும் நீங்கள் வல்லவர். உங்களது எனர்ஜி பாராட்டும்படியாக இருக்கும். ஆனால், சில சமயங்களில் எதுகுறித்தும் யோசிக்காமல் நீங்கள் செயற்பட துவங்கிவிடுவீர்கள். சிலவேளைகளில் நீங்கள் பெரிதுப்படுத்தி பாதிப்புள்ளாக வாய்ப்புகள் உண்டு.

#8

நீங்கள் ஒரு துடிப்பான நபர். தனிச்சையாகவும், துரிதமாகவும் ஒரு செயலை செய்வதிலும், ஒரு முடிவை எடுப்பதிலும், சூழலுக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வதிலும் நீங்கள் வல்லவர். உங்களது எனர்ஜி பாராட்டும்படியாக இருக்கும். ஆனால், சில சமயங்களில் எதுகுறித்தும் யோசிக்காமல் நீங்கள் செயற்பட துவங்கிவிடுவீர்கள். சிலவேளைகளில் நீங்கள் பெரிதுப்படுத்தி பாதிப்புள்ளாக வாய்ப்புகள் உண்டு.

#9

பச்சாதாபம் எதிர்பார்க்கும் நபர். மற்றவர்களை எளிதாக படித்துவிடுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் மக்களின் உணர்வுகளை தெளிவாக அறிந்துக் கொள்வீர்கள். மற்றவர்களை காட்டிலும், மக்களை, மனிதர்களை நன்கு அறிந்துக் கொள்ளும் திறன் உங்களிடம் இருக்கும். அக்கறை கொண்டிருப்பீர்கள்,. மற்றவர்கள் பேசுவதை காதுக் கொடுத்து கேட்கும் குணம் அதிகமாகவே இருக்கும்.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button