மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…மலச்சிக்கலுக்கு மருந்தாகும் புளிச்சக்கீரை: யாரெல்லாம் எப்படி எடுத்து கொள்வது தெரியுமா?

தினம் ஒரு கீரை எல்லா நோய்களிலிருந்தும் விலக்கி வைக்கும்.

கீரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. பலவிதமான கீரை வகைகளில் கொஞ்சம் புளிப்புத்தன்மையும், அதிக ருசியும் கொண்ட புளிச்சக்கீரையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

 

 

  • புளிச்சக்கீரை உடலை சுத்திகரிக்க உதவுகிறது நன்மையான அமிலங்களை கொண்டிருக்கும் இந்த கீரையிலிருந்து வெளிப்படும் காரத்தன்மையுள்ள பொருள் உடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்ற செய்கிறது.
  • உடலில் இருக்கும் நச்சை குறிப்பாக இரத்தத்தில் இருக்கும் நச்சை வெளியேற்றி ரத்தத்தை தூய்மையாக்கும் பணியை புளிச்சக்கீரை செய்கிறது.
  • மந்தமான உணர்வு, இருமல், காய்ச்சல் காலங்களில் புளிச்சக்கீரை சிறந்த தீர்வாக இருக்கும்.
  • உடலில் சமநிலையற்று இருக்கும் வாதத்தால் உண்டாகும் பிரச்சனைகளுக்கு புளிச்சக்கீரை உதவும்.
  • வாதம் சம்பந்தமான நோய்கள் தீவிரமாகாமல் இருக்கவும், கட்டுக்குள் வைக்கவும் படிப்படியாக குணமாகவும் உணவு முறையில் அடிக்கடி புளிச்சக்கீரையை சேர்க்கவேண்டும்.
  • புளிச்ச்சக்கீரை பொடி, புளிச்சக்கீரை துவையல், புளிச்சக்கீரை மசியல் என ஏதாவது ஒரு வகையில் வாரம் இரண்டு முறை சேர்த்து வந்தால் வாதம் குறைந்து சமமாகும்.
  • மலச்சிக்கல் வந்த பிறகு புளிச்சக்கீரையை எடுத்துகொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
  • மலச்சிக்கல் தீவிரமாகும் போது அது மூலப்பிரச்சனையை கொண்டு வர வாய்ப்புண்டு. அதனால் ஆரம்பகட்டட்தில் கவனித்து உணவு பழக்கம் வழியாகவே மலச்சிக்கலை குணப்படுத்தி விடலாம்.
  • குடல் புண்ணை ஆற்றி செரிமானக்கோளாறை சீர் செய்து மலச்சிக்கல் இல்லாமல் செய்யும் புளிச்சக்கீரையை வாரம் இரண்டு முறை எடுத்துகொள்வதன் மூலம் குணப்படுத்தலாம். வாரம் ஒரு முறை இதை சேர்த்து வந்தால் மலச்சிக்கல் அபாயம் பெருமளவு குறையக்கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button