தலைமுடி சிகிச்சை

தலைமுடி வளர மருதாணி !

சிலருக்கு தலை முடி பலமிழந்து காணப்படும். தலை வரும்போதே அதிக அளவு உதிரும். மருதாணி பவுடரை ஒரு பாத்திரத்தில் போட்டு, பிறகு அதில் கொதிக்க வைத்த டீ தூள் டிக்காஷனை ( ஆறிய பிறகு) அதில் ஊற்றி திடமாக கிளறி, பின் முட்டையின் வெள்ளை கரு, தயிர், சேர்த்து நன்கு கிளறி, பின் எலுமிச்சை பழ சாறு ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்து, உங்கள் தலை முடியில் முழுவதுமாக படரும் படி ஊற வைத்து 3 மணி நேரம் கழித்து வெறும் தண்ணீரில் அலச வேண்டும். உங்கள் கூந்தல் உதிர்வது ஒரு முறை உபயோகத்தில் குறைந்துவிடும்.

24612

* கூந்தல் சிறிது நிறம் மாறும். வெயிலில் மட்டுமே சிறிது கோல்டன் கலராக தெரியும். அது மிகவும் அழகாக தான் தெரியும்.
24613
* நிறம் தேவை இல்லை என்றால், கூந்தலில் தேங்காய் எண்ணெய் போட்டு ஊற வைத்து, பின் மருதாணியை போடுங்கள்.

* சிறிது சிவப்பு நிறம் வேண்டும் என்றால் டீ தூளுக்கு பதிலாக பீட்ரூட் காயை வேகவைத்த தண்ணிரை மருதாணியில் ஊற்ற வேண்டும்.
http://www.tamilan24.com/images/i/2015/09/24614.jpg
* நீண்ட கூந்தல் என்றால் 2 எலுமிச்சை,2 முட்டை வெண்கரு, ஒரு கப் தயிர் போதும். சிறிய கூந்தல் என்றால் அனைத்திலும் 1 போதும். இவ்வாறு மாதம் ஒரு முறை (அ) இரண்டு முறை செய்து வாருங்கள். வித்தியாசம் தெரியும். இதனால் முடி உதிராது. நன்கு திடப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button