மருத்துவ குறிப்பு

பெண்களே கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை இயற்கை வழியில் கரைக்க வேண்டுமா ? இதை முயன்று பாருங்கள்..

இந்த நாட்களில் பெரும்பாலான பெண்கள் கருப்பை நீர்க்கட்டிகளை என்னும் கோளாறு ஏற்படுகிறது.

இந்த கோளாறு ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (pcos அல்லது pcod) என்று அழைக்கப்படுகிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கருப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்க கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன் இயற்கை வழி முறைகளை முயற்சிக்கவும்.

இப்போது பக்க விளைவுகள் இல்லாமல் நீர்க்கட்டிகளைக் குறைக்க சில இயற்கை வழிகளைப் பார்ப்போம்.

சூடான நீரில் பாட்டிலை நிரப்பி, அடிவயிற்று மற்றும் இடுப்புக்கு 15 நிமிடங்கள் ஒத்தடம் கொடுக்க வேண்டும். வயிற்று வலியின் போது இந்த முறை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒரு துணியில் விளக்கெண்ணெயை நனைத்து அடிவயிற்று பகுதியில் வைத்து, பிளாஸ்டிக் கவர் கொண்டு சுற்றி, மீண்டும் பழைய துணியால் சுற்ற வேண்டும். பின் சுடுநீர் பாட்டில் கொண்டு அடிவயிற்றுப் பகுதியில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை என, மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகள் விரைவில் கரைந்துவிடும்.

1 கப் எப்சம் உப்பு மற்றும் 10 சொட்டு லாவெண்டர் எண்ணெயை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் கலந்து உப்பு கரைத்து, பின்னர் உங்கள் உடலை 20-30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு நாளைக்கு ஒரு முறை இதைச் செய்தால் கருப்பை நீர்க்கட்டி நீங்கும்.

நீங்கள் தினமும் 2-3 கப் சீமைச்சாமந்தி தேநீர் குடிக்கும்போது, ​​சீமைச்சாமந்தி உள்ள பொருட்கள் நீர்க்கட்டிகளைக் கரைத்து, அதனால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தில் நீக்கும்.

1 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஒரு நாளைக்கு 1-2 டம்ளர்களைக் குடிக்கவும்.நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button