ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

வெள்ளைபடுதலுக்கு இய‌ற்கை வைத்தியம்,,,

பெண்களின் மாதவிலக்கு சுழற்சி சிக்கலானது. ஆயுர்வேதத்தில் ரத்த பிரதார என்று அதிக உதிரப்போக்கு குறிப்பிடப்படுகிறது. நோயாளியின் ப்ரக்ருதி முதலில் கண்டுபிடிக்கப்படும்.

அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை பரிசோதிக்கப்படும். பிறகு பஞ்ச கர்மா சிகிச்சை ஆரம்பிக்கப்படும். உடலிலிருக்கும் நச்சுப்பொருட்களை களைந்து எடுக்கப்படும்.
fghjk
ஆயுர்வேத வீட்டு வைத்தியம்
1. ஏழு மாதுளை இலைகளை எடுத்து ஏழு அரிசியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நசுக்கவும். இந்த களிம்பை நோயாளிக்கு 30 நாட்கள் தினமும் இரு வேளை கொடுக்கவும்.
2. நெல்லிக்காயை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
3. முளைக் கீரையின் வேர்களை அரிசி களைந்த நீருடன் உட்கொள்ளலாம்.
4. உங்கள் மாதவிலக்கு ஆரம்பமாவதற்கு ஒரு வாரம் முன்பு ஒரு மேஜைக்கரண்டி கற்றாழை கதுப்பையும் (சாற்றை), ஒரு சிட்டிகை கருமிளகுப் பொடியும் சேர்த்து, சாப்பாட்டுக்கு முன் சாப்பிட்டு வரவும்.
5. இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிக்கலாம். இது மாதவிலக்கை சீராக்கும். 6. அசோக மரத்தின் பட்டைகளை 90 கிராம் எடுத்து, 30 மி.லி. பால், 360 மி.லி. நீருடன் கலந்து கொதிக்க வைக்கவும். கலவை கிட்டத்தட்ட 90 கிராம் அளவுக்கு சுண்டி வந்ததும் இறக்கவும்.

இந்த அளவை தினம் ஒன்று (அ) மூன்று முறை கொடுத்து வரவும். மாதவிலக்கான பின் வரும் நாளாவது நாளிலிருந்து ஆரம்பித்து இந்த கஷாயத்தை, உதிரப்போக்கு நிற்கும் வரை கொடுக்கலாம். தினமும் இந்த கஷாயத்தை புதிதாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button