ஆரோக்கியம் குறிப்புகள்

சமைத்த உணவுகளின் சுவையை சரிப்படுத்துவது எப்படி?

குழம்பு ரசம் செய்யும்போது உப்பு, காரம் கூடிவிடும் அல்லது குறைந்துவிடும். குறைந்தால் அதை சேர்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ஆனால் கூடுதலாக இருந்தால் வயிற்றுக்குள் செல்வதற்கு பதில் நேராக குப்பைத்தொட்டிக்கு போய்விடுமே…. அதை எப்படி சரி செய்யலாம் என்று ஒரு சில ஐடியாஸ்.

உப்பு:

காரத்தையும் புளிப்பையும் அதிகரித்தால் உப்பு சுவை குறையும். அதனால் குழம்பில் உப்பு கூடினால் இன்னும் கொஞ்சம் புளியைக்கரைத்து கொதிக்க விடலாம்.

அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கலாம்.

அல்லது தக்காளியை (கொஞ்சம் பழுத்தது கிடைத்தால் நல்லது) பொடியாக நறுக்கி தனியாக வதக்கிச் சேர்த்து கொதிக்க விடலாம்.

சில வகை குழம்புகளுக்கு பச்சை மிளகாய்களை பாதியாக பிளந்து (slit the chillies) அல்லது சிவப்பு மிளகாய்கள் என்றால் ரெண்டாக கட் செய்து தாளிப்பில் சேர்த்தாலும் உப்பு குறையும்.

மோர்க்குழம்பு போன்றவை செய்யும் போது உப்பு கூடினால் கவலையே வேண்டாம், இன்னும் ஒரு கப் தயிர் சேர்த்துவிடலாம். தயிர் இல்லை என்றாலும் கொஞ்சம் புளியைக் கரைத்து கொதிக்க விட்டு சேர்க்கலாம்.

பருப்பு குழம்பு/சாம்பார் என்றால் முள்ளங்கியை தோல் சீவி வில்லை வில்லையாக நறுக்கி சேர்த்து கொதிக்க விடலாம். இது சில வகை குழம்புக்குதான் ருசிக்கும்.

ஒரு உருண்டை சாதத்தை உருட்டி குழம்பில் போட்டு வைத்தால் உப்பு சரியாகும்.
kontrol

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button