சிற்றுண்டி வகைகள்

எள்ளு கடக் பூரி

தேவையானபொருள்கள்
மைதா மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
சூடாக்கிய வெண்ணெய் அல்லது நெய் – 1/2 கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
கருப்பு, வெள்ளை எள் (இரண்டும் கலந்தது) – 1/2 கப்,
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

செய்முறை
மைதாவை வாய் அகலமான ஒரு பாத்திரத்தில் போட்டு, உருக்கிய நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, உப்புப் போட்டு பிரெட் தூள் மாதிரி கலக்கவும். கையில் பிடித்தால் உதிராமல் கொழுக்கட்டை மாதிரி சிறிது நேரம் உடையாமலும் இருக்க வேண்டும். இதுதான் பதம். அதை 10 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைத்து, பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். அதை பூரியாகத் தேய்த்து அதன் மேல் 1 டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் தடவி, மைதா 1 டீஸ்பூன் தூவி, உருட்டி பூரிகளாகத் தேய்க்கவும். அது ஈரமாக இருக்கும் போதே கருப்பு, வெள்ளை எள் கலந்து, எள் கலவையை 1/2 டீஸ்பூன் அளவாக பூரியில் வைக்க வேண்டும். சிறிது அழுத்தி ஒட்ட வேண்டும். கடாயில் எண்ணெய் சூடாக்கி இந்த எள்ளு பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து, வடித்து வைத்துக் கொள்ளவும். ஆறியதும் டப்பாவில் போட்டு வைக்கவும்.

இப்போது சுவையான எள்ளு கடக் பூரி ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!
sunsamayal.com%20%20Sesame%20puri

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button