அடேங்கப்பா! மூன்று ஆண்டுகளுக்கு பிறகுபிரபல சீரியல் நடிகைக்கு குழந்தை!
தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் ஒருசில காரணங்களால் சீரியலில் இருந்து சில காலம் விலகி இருப்பார்கள். அதில் கர்ப்பகாலமும் ஒன்று. அப்படி பிரபல தொலைக்காட்சியில் பகல் நிலவு, ரெக்க கட்டி பறக்குது மனசு போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சமீரா செரீஃப்.
கடந்த 2019ல் நடிகர் சித் அன்வரை காதலித்து குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமீபத்தில் தான் கர்ப்பமானதை அறிவித்து சில போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
தற்போது சமீரா சித் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என புகைப்படத்தோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.