முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம்…

வெள்ளரிக்காயில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குகிறது. வெள்ளரிக்காய் உடலுக்கு மட்டுமல்ல. சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது.

சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். சருமத்தில் அழுக்கு சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பாப்போம்.

வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் ஆகியவை நீங்கும். சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் கட்டுப்படும். மேலும் சரும துளைகளில் இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும்.

வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போடலாம்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வெள்ளரிக்காயின் தோலை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அதில் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

சருமத்தில் உள்ள கரும்புள்ளியை நீக்க சிறிதளவு தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து அதனுடன் தோல் சீவிய ஆப்பிள் மற்றும் வெள்ளரி கலந்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிது தேன் கலந்து ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு அந்த கலவையை முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமம் பிரகாசிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button