முகப் பராமரிப்பு

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள்

தோலுக்குத் தேவையான எண்ணெய் பசை இல்லாதபோது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப்போய் காணப்படும். ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் பேஷியல் ஸ்ட்ரோக் கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னத்தை பெறலாம்.

மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகள் இவற்றை துருவி ஜூஸ் செய்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு கன்னத்தின் நிறம் மற்றும் பளபளப்பு கூடும்.

பால் – 1 டீஸ்பூன்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
பார்லித்தூள் – 1 டீஸ்பூன்

ஆகியவற்றை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து நுரை வரும் வரை நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் கிரீமை, முகம், கழுத்து, கண்களை சுற்றி என அனைத்துப் பகுதிகளிலும் பூசவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். உங்கள் கன்னம் வெண்மை பொலிவுடனும் மற்றும் முகம் பளபளப்புடனும் இருக்கும்.

ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு கழுவவும். தேன், சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி, கன்னத்தை பளபளப்பாக்கும்.
Trends Beauty Fashion Tips For Women1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button