அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கும் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்ப் பெண்!

தமிழில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று, இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனிரசிகர்களின் கூட்டம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிறார். இதுவரை நான்கு சீசன் நடைபெற்று முடிந்த நிலையில் ஐந்தாவது சீசன் இன்று மிகப் பிரம்மாண்டமாக துவங்கியது.

அதன் படி இந்த வீட்டிற்குள் ஒவ்வொரு போட்டியாளர்களும் நுழைந்து வருகின்றனர். மொத்தம் 18 போட்டியாளர்கள், 100 நாட்கள் இறுதியில் வெல்பவருக்கு அந்த பிக்பாஸ் டைட்டில் மற்றும் பரிசுத் தொகை கொடுக்கப்படும்.

பிக் பாஸ் தமிழில் கடந்த சீசன்களில், இலங்கையில் இருந்து லோஸ்லியா மரியேசன், தர்ஷன் தியாகராஜா, மற்றும் மலேஷியா வாழ தமிழரான முகேன் ராவ் ஆகியோர் இதுவரை வெளிநாடுகளில் இருந்து பங்கேற்றனர்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அந்த வரிசையில், இந்த 5-வது சீசன் போட்டியாளர்களில் ஒருவராக ஜேர்மனி வாழ் இலங்கை தமிழ்ப்பெண்ணான மதுமிதா இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

மதுமிதா ஜேர்மனியிலேயே பிறந்து வளர்ந்த பெண். தற்போது ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் இவர், அதற்கு முன்பாக பேஷன் டிசைனராக இருந்துள்ளார்.

மிகப்பெரிய மொடல் ஆகவேண்டும், சினிமா துறையில் நடிகையாகவோ அல்லது எதோ ஒரு வகையில் சாதனை புரியவேண்டும் என்ற கனவுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button