அழகு குறிப்புகள்

விழாக்கோலம் பூண்டிருக்கும் ஷாருக்கானின் மன்னத் இல்லம்

போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த அக்டோபர் 3-ம் தேதி பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் மும்பை NCB- யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சுமார் 3 வாரங்களுக்கும் மேல் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் ஷாருக் கான் மற்றும் சட்ட வல்லுனர்களின் கடும் முயற்சியால் நேற்றய தினம் ஆர்யனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம். ஆனாலும் சில சட்டச்சிக்கல்களால் உடனே அவரை விடுவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் 30ம் தேதி சனிக்கிழமையான இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்க படுகிற நிலையில் மும்பையில் உள்ள ஷாருக் கானின் மன்னத் இல்லம் விழாக்கோலம் பூண்டிருப்பது போல் காட்சி அளிக்கிறது.

மேல் மாடி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீட்டின் மற்ற பகுதிகள் காணாத வகையில் திரையிட்டு மூடப்பட்டுள்ளது. இந்த அலங்காரங்கள் எல்லாம் ஆர்யனின் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டதா அல்லது தீபாவளி பண்டிகையையொட்டி அலங்கரிக்கப்பட்டதா என தெரியவில்லை.21 617cdc84b5

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button