34.9 C
Chennai
Sunday, May 11, 2025
dfdfd
Other News

இலங்கையில் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள்! வெளிவந்த தகவல் !

பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

நவம்பர் 16 ஆம் திகதி, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நவம்பர் 20 ஆம் திகதி, கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.fgdgd

Related posts

பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் யுகேந்திரன் பதிவு-அவமானப்படுத்திய விஜய் டிவி..

nathan

கருங்காலி மாலை அணிந்து செய்யக்கூடாதவை

nathan

கோடீஸ்வரரான மதுரை இளைஞர்.., கேரள லொட்டரியில் அடித்தது அதிர்ஷ்டம்

nathan

இன்சூரன்ஸ் பணத்துக்காக ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா?

nathan

சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! ‘விடாமுயற்சி’-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

nathan

கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம்

nathan

பிரதமர் மோடி பெருமிதம் – திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது

nathan

பிரியங்கா காந்தி உருக்கம் ! “தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க முதன்முறையாக தமிழகம் வந்தேன்..”

nathan

பிரபல கபடி வீராங்கனை எடுத்த விபரீத முடிவு..

nathan