ஆரோக்கியம் குறிப்புகள்

கிட்னி பிரச்சினை தடுக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

இன்றைய நவீன காலக்கட்டத்தில், பலருக்கும் மாரடைப்பு மற்றும் கிட்னி பிரச்சினை சர்வ சாதாரணமாகிவிட்டது. சிறிய வயது குழந்தைகள் கூட கிட்னி பிரச்சினையால் பாதிக்கபடுவதை காணமுடிகிறது.

இதற்கு முக்கிய காரணம், உடலில் இருந்து கழிவுகள் முறையாக வெளியேறாமல் சிறுநீர் பாதைகளில் தங்குவதால் கிட்னி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் உடலை புத்துணர்ச்சியாக வைத்திருப்பதற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் கற்கள் உருவாவதை தடுப்பதில் மக்னீசியம் மூளையாக செயல்படுவதால், மக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதற்காக, பருப்பு வகைகள், வெண்ணெய், அவக்கோடா ஆகிவற்றை தினசரி உணவில் எடுத்துகொள்ளலாம். மக்னீசியம் நிறைந்த உணவுகள் ஆக்சலேட்டுகள் குடலில் உறிஞ்சுவதைத் தடுத்து, சிறுநீரக கற்கள் உருவாதையும் தடுக்கின்றன.

சிறுநீரக கற்கள் உருவாதை தடுக்க வேண்டும் என்றால், கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பால், பாலடைக்கட்டி, தயிர் போன்றவைகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.

இதனை அன்றாட டையட்டில் சேர்த்துக்கொண்டால், கால்சிய படிகங்கள் சிறுநீர் பாதையில் தங்காமல், சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிடும். சிட்ரிக் உணவுகள் சிறுநீர் பாதையில் தேங்கும் படிகங்களை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button