அறுசுவைசைவம்

வரகு அரிசி புளியோதரை

1-DSCN2153தேவையான பொருட்கள்;

வரகு அரிசி – 1 கப்
புளி – எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கடுகு உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
வேர்க்கடலை – சிறிதளவு

வறுத்து அரைக்க :

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
தனியா – 2 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்

செய்முறை :

• வேர்க்கடலையை எண்ணெயில் வறுத்து வைத்து கொள்ளவும்.

• வரகு அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் (எண்ணெய் ஊற்ற கூடாது)அதில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றாக போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பவுடராக அரைத்து கொள்ளவும்.

• புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

• நன்றாக கொதித்து எண்ணெய் பிரியும் போது அரைத்து வைத்துள்ள மசாலா பவுடரை போட்டு 2 நிமிடம் கிளறவும்.

• கடைசியாக வேர்க்கடலை, வரகு அரிசியை போட்டு கிளறி இறக்கவும்.

• தினமும் சிறு தானியங்களில் இவ்வாறு உணவுகளை செய்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button