ஆரோக்கிய உணவு

கோழி கால்களை சாப்பிட்டு வருவதால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

சிக்கன் எனப்படும் கோழிக்கறி பலருக்கும் பிடித்த ஒரு அசைவ உணவாக உள்ளது. கோழி கறி என்பது உடலுக்கு நல்லது இல்லை என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் கோழி கால்களில் மட்டும் அளவுக்கு அதிகமான பயன்கள் உள்ளன என்று யாருக்கும் தெரியவில்லை.

மனிதர்களுக்கு ஏதும் விபத்து ஏற்பட்டு உடலில் உள்ள எலும்புகள் முறிந்து விட்டால் அந்த உடைந்த எலும்பு விரைவில் ஒன்று சேர ஆட்டுக்கால்களை சூப் வைத்து கொடுப்பார்கள்.

அதனால் உலகளவில் இந்த ஆட்டு கால் சூப் என்பது பரவியுள்ளது கோழியின் கால்களை சாப்பிட்டால் கிடைக்கும் பயன்கள் குறித்து காண்போம்.

கோழி காலில் இருக்கும் கொலாஜன் என்ற பொருளின் காரணமாக சருமமமனது நன்றாக சீர்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்குவதற்கு கோழி காலை உண்டு வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் இருந்து விடுபட இயலும். கோழி காலில் இருக்கும் கொலாஜன் அதிகளவு இருக்கும் காரணத்தால் நமது உடலுக்கு தேவையான புரோட்டின் மற்றும் கால்சிய சத்துக்களை அதிகரிப்பதற்கு உதவுகிறது.

இதன் மூலமாக நமது உடலில் இருக்கும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கிறது. நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கொலாஜெனின் மூலமாக வெளியேற்றப்பட்டு., நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது.

மேலும் நமது எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெற்று., எலும்புகள் வலுப்பெறுகிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது பாதுகாக்கப்பட்டு., நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து நமது உடலின் நலத்தை அதிகரிக்கிறது.

அதுமட்டுமல்லாது நமது உடலில் ஏதேனும் காயங்கள் ஏற்படும் பட்சத்தில். அந்த காயங்கள் அனைத்தும் விரைவில் குணமாகும். நமது நகங்களுக்கு அதிகளவு வலு மற்றும் பற்களின் ஈறுகளை வலுப்படுத்துவது போன்ற நன்மைகளை செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button