கார வகைகள்

பருத்தித்துறை வடை

செ.தே.பொ :-

உழுந்து – 1/2 சுண்டு,
அவிக்காத வெள்ளை மா – 1 சுண்டு
செ.மிள. பொடி – 2 தே. க
பெருஞ்சீரகம் – 1 மே.க
உப்பு – தே.அளவு
கறிவேப்பிலை – சிறிது ( பொடியாக வெட்டி)
எண்ணெய் – தே.அளவு

செய்முறை :-

* உழுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
* உழுந்து ஊறியதும் அத்துடன் மற்றைய பொருட்களை சேர்த்து 3 மே.கரண்டி எண்ணெய் விட்டு நன்றாகக் குழைக்கவும்.
* சிறிய பாக்களவு உருண்டைகளாக உருட்டி, பூரிக் கட்டையால் அழுத்தி வட்டமாக்கி ( மெல்லியதாக) கொள்ளவும்.
* அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ,கொதித்ததும் தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
** (அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்க்கவும்)
images7

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button