
வேப்பங்கொட்டை முடி வளர்ச்சியை தூண்டி, கருகருவென்று வளரச் செய்யும். தலையில் சர்க்கரை கொட்டியது போல… சிலருக்கு கொத்து கொத்தாக ஈறுகள் நிரம்பியிருக்கும்.
`தலைகுனிவை’ கருகிற இந்தச் சிக்கலிலிருந்து விடுபடச் செய்கிற சிகிச்சை இது… வேப்பங்குச்சி, பொடுதலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து தலையில் `பேக்’ போடுங்கள். காய்ந்ததும் அலசுங்கள்.
வாரம் இருமுறை இது போல் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகு, ஈறு அடியோடு மறைந்து `பளபள’ என்று முடி பிரகாசிக்கும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்.