30.8 C
Chennai
Sunday, May 11, 2025
ld1743
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சோர்வை போக்கி சருமத்தை பொலிவாக்கும் வழிமுறைகள்

சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று படித்து தெரிந்து, அதன்படி பின்பற்றினால் நிச்சயம் அழகாக ஜொலிக்கலாம்.

• சருமத்தின் அழகைப் பராமரிப்பதில் தண்ணீர் நிச்சயம் மிகவும் இன்றியமையாதது. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை அவசியம் பருக வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதுடன், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.

• தயிரில் லாக்டிக் ஆசிட் என்னும் ப்ளீச்சிங் பொருள் இருப்பதால், அதனைப் சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் பளிச்சென்று மாறும். தயிரில் மஞ்சள் தூள் அல்லது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு மாஸ்க் போட வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வந்தால் சருமம் பொலிவடைவதை காணலாம்.

• ரோஸ் வாட்டர் சருமத்தின் ஈரப்பசையை அதிகரிப்பதோடு, pH அளவை சீராகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள சரும செல்களை வலுவாக்கி, சருமத்தில் முதுமைக் கோடுகள், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

• காபி பொடியில், சிறிது சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தை தேய்த்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இது  சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தை அழகாக்கும்.

Related posts

வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம்

nathan

வண்ணத்துப்பூச்சி உடையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா

nathan

Tips.. இதை செய்தால் சருமம் பொலிவுபெறும்..!!

nathan

மையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

Beauty tips.. முக பளபளப்புக்கு உதவும் திராட்சை

nathan

உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை காட்டும் அறிகுறியும், தீர்வும்

nathan

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

பழங்கள் அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?அறிந்து கொள்ளுங்கள்

nathan

இந்திய ஆண்களின் ஆரோக்கிய பழக்க வழக்கங்கள்! தொடர்ந்து படியுங்கள்

nathan