அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முக பொலிவுக்கு கடுகு ஃபேஷியல்

images (1)வீட்டில் சமையலில் பயன்படும் கடுகு, சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இந்த கடுகை வைத்து முகத்திற்கு ஸ்கரப் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் கடுகை எடுத்துக் கொண்டு, 2 டேபிள் ஸ்பூன் ரோஸ் அல்லது லாவண்டர் எண்ணெயை விட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி, நன்கு மென்மையாக 3-4 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் அதனை கழுவிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

* கடுகை வைத்து ஃபேஷியல் செய்வதில், மிகவும் சிறந்தது என்றால், அது இந்த முறை தான். இந்த முறையால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கிவிடும். இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, சற்று நேரம் மசாஜ் போல் செய்ய வேண்டும். பின் அதனை குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும்.

* கடுகு மற்றும் கற்றாழையை கலந்து செய்து வந்தால், சருமத்திற்கு தேவையான ஈரப்பசை கிடைப்பதோடு, முகத்தில் உள்ள பிம்பிள், சரும துளைகளில் உள்ள தூசிகள் போன்றவை போய்விடும். இந்த ஸ்கரப் செய்ய, 1 டேபிள் ஸ்பூன் கடுகு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து, முகத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இது ஒரு மிகவும் சிறப்பான இயற்கை ஸ்கரப். இந்த முறையால், கடுகு நிச்சயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் மில்க் கிரீம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து, முகத்திற்கு தடவி, 3-4 நிமிடம் தொடர்ந்து தேய்த்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் பொலிவோடு காணப்படுவதோடு, ஸ்கரப்பிற்குப் பின் சருமத்தின் நிறம் சற்று கூடும்.

* முகம் நன்கு மினுமினுப்போடு காணப்பட, ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து, நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 2-3 நிமிடம் மென்மையாக தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

– மேற்கூறிய முறைகளை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் படிப்படியாக முகம் பொலிவாவதை தெரிந்து கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button