சிற்றுண்டி வகைகள்

தினை உப்புமா அடை

தேவையான பொருட்கள் :

சாமை அரிசி – 1/2 கப்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
மிளகு – 3/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
துருவிய கேரட் – 3 ஸ்பூன் (விரும்பினால்)
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – தாளிக்க

செய்முறை :
e0e10119 54e6 4360 a429 dfb82fd9ef42 S secvpf
• துவரம் பருப்பு, சீரகம், மிளகை மிக்சியில் போட்டு ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.

• கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் இதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கேரட்டை போட்டு வதக்கவும்.

• கேரட் சிறிது வதங்கியதும் அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்து வரும் போது உப்பு, தினை, பொடித்த பருப்பு போட்டு மிதமான தீயில் நன்றாக வேக விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி கலவை கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.

• பின் இந்த கலவையை உருண்டைகளாக பிடித்து அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்..

• சுவையான சத்தான தினை உப்புமா அடை ரெடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button