அழகு குறிப்புகள்

தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதில் உடலுக்கு இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

தேங்காய் எண்ணெய் என்றாலே அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை கொண்டு தினமும் வாய் கொப்பளிப்பதில் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது. தொண்டை புண் அல்லது தொண்டை வலி இருக்கும்போது ஆயில் புல்லிங் செய்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

ஆயில் புல்லிங் என்பது ஒரு பழங்கால முறை என்பதால் எண்ணெய் பயன்படுத்தி வாய் கொப்புளிப்பது வாய் பகுதி சுத்தமாகிறது. மேலும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..

 

நன்மைகள்:-

தினமும் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்வதால் சுவாசம், உணவுக்குழல் பகுதியில் தோன்றும் தொற்று குறையும். இது செரிமானத்த்தில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கும் உதவுகிறது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

தேங்காய் எண்ணெயில் ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. குறிப்பாக பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிபினால்கள், வைட்டமின் ஈ, அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.

தேங்காய் எண்ணெய் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் பற்களுக்கு இடையில் உள்ள தொற்றுகள் நீங்குகிறது மற்றும் உங்கள் பற்கள் ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பொதுவாகவே தேங்காய் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையை பெற்றுள்ளது. தேங்காய் எண்ணெய்யை கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள வீக்கத்தைக் குறைத்து ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படுத்தும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button