Other News

தனுஷிற்கு தெரியாமல் மகன் வாழ்க்கைக்கு முதல் அடிதளம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 வருடங்கள் கழித்து பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இருவரும் மனப்பூர்வமான இந்த முடிவுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த செய்தி மிகப்பெரியளவில் அதிர்ச்சியை கொடுத்தது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நடத்தும் ராக் வித் ராஜா என்ற லைவ் கார்ன்செர்ட்டில் இசைஞானி இளையராஜா முன்னிலையில் நடத்தப்பட்டது.

பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டுள்ளார். மகன் வளர்ந்து விட்டான் என்று லிங்கா கையை மட்டும் பிடித்து யாத்ராவை அவன் வழியில் நடக்க வேண்டும் என்று தனுஷ் நடந்து வரும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.

இந்நிலையில் 15 வயதாகும் யாத்ராவுக்கு அக்டோபர் மாதம் வந்தால் 16 வயதாகிவிடும். அவரை வைத்து படம் எடுக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாத்ராவை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஐஸ்வர்யா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸின் துர்கா பட வேலையை முடித்துவிட்டு யாத்ரா பட வேலையை துவங்குவாராம். இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த விஷயம் நடிகர் தனுஷிற்கு தெரியுமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். மகனின் எந்த முடிவாக இருந்தாலும் அவரது அப்பாவிடம் கேட்பது முக்கியம் எனவும் கூறி வருகிறார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button