கை வேலைகள்பொதுவானகைவினை

பானை அலங்காரம்

image0044a

தேவையான பொருட்கள்:

  • பெரிய பானை
  • உப்புத்தாள்
  • எம்சீல்
  • fabric கலர்கள்
  • வார்னிஸ்
  • 3டி அவுட்லைனர்
  • பிரஷ்
  • பெவிக்கால்
செய்முறை:

  • பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
  • பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • முதலில் கருப்பு கலரை பானை முழுவதும் அடிக்கவும். ஒரு மணிநேரம் காயவிடவும்.
  • எம்சீலில் இரண்டு கலரையும் நன்கு கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  • நடுவில் சிறு சிறு உருண்டைகளை வட்டமாக தட்டி தேவையான எடுத்தில் பசையை தடவி ஒட்டவும்.
  • அதை சுற்றி பூ இதழ்களை செய்து பசை தடவி ஒட்டவும்.
  • அனைத்து பூக்களுக்கும் கொடி போல் ஒல்லியாக உருட்டி இணைக்கவும்.
  • அனைத்தையும் நன்கு காயவைக்கவும்.
  • பூவின் நடுவில் மஞ்சள் கலரும், பூக்களுக்கு ரோஸ் கலரும், கொடிகளுக்கு பச்சை கலரை அடிக்கவும்.
  • பின்பு காயவைக்கவும்.

image0046h

  • காய்ந்த பின்பு மேலே பாதியளவு மஞ்சள் கலர் அடிக்கவும்.
  • எம்சீலை சிறு உருண்டைகளாக உருட்டி திராட்ச்சை கொத்து போல் பானையில் பசை தடவி ஒட்டவும்.
  • அதன் மேலே கொடி போல் செய்து பானை கழுத்து பகுதியில் ஒட்டவும்.
  • நன்கு காய்ந்த பின்பு திராட்ச்சைக்கு ஊதா நிறமும், கொடிக்கு பச்சை நிறம் அடிக்கவும்.
  • காயவிடவும்.

image0047d

  • கழுத்து பகுதியை சுற்றி 3டி அவுட்லைனர் கொண்டு வளைவு வளைவாக வரையவும். காயவிடவும்.

image0048u

  • நன்கு காய பின்பு வார்னிஸ் அடித்து நிழலில் 1நாள் முழுவதும் காயவிடவும்.
  • அழகான பூந்தொட்டி தயார்.


image0044a

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button