ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க வீட்ல இந்த பொருள் இருந்தா உடனே தூக்கி போடுங்க.. தெரிந்துகொள்வோமா?

போர் படங்கள்

ராமாயணம் முதல் மகாபாரதம் வரை எந்த விதமான போர் படங்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இதுப்போன்ற போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் உள்ளோர் இடையேயான பகையை அதிகரித்து, வீட்டின் அமைதியை சீர்குவைக்கும்.

கள்ளிச்செடி அல்லது முட்கள் நிறைந்த செடி

 

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் முட்கள் நிறைந்த கள்ளிச்செடியை வளர்க்கக்கூடாது. ரோஜாவில் முட்கள் இருந்தாலும், இந்த ரோஜா செடியைத் தவிர வேறு எந்த முட்கள் நிறைந்த செடிகளையும் வீட்டினுள் வளர்க்கக்கூடாது. வேண்டுமானால் வீட்டின் வெளியே வைத்து வளர்க்கலாம்.

எதிர்மறை படங்கள்

 

குறிப்பிட்ட சில வகையான போட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அதில் பூக்கள் இல்லாத மரம், கப்பல் நீரில் முழ்குவது, நிர்வாண போட்டோ, போரில் வாள் அசைப்பது, வேட்டையாடும் காட்சிகள், சிறையில் அடைக்கப்பட்ட யானைகள், சோகம் அல்லது அழுவது போன்ற போட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இம்மாதிரியான போட்டோக்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

தாஜ்மஹால்

 

தாஜ்மஹால் அல்லது அதன் போட்டோவை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. தாஜ்மஹால் என்னதான் உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்தாலும், இது ஒரு கல்லறை மற்றும் மரணத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்திருந்தால், பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

மிருகங்களின் சிலைகள் மற்றும் ஓவியங்கள்

 

பன்றி, பாம்பு, கழுதை, சீன ஆந்தை, வௌவால், கழுகு, காகம், புறா போன்ற பறவைகள் அல்லது விலங்குகளின் போட்டோக்கள் அல்லது சிலைகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இம்மாதிரியான போட்டோக்கள் அல்லது சிலைகளை வீட்டின் படுக்கை அறையில் வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால் தம்பதிகளிடையே சண்டைகள் அதிகரிக்கும்.

உடைந்த கண்ணாடி

 

வீட்டில் உடைந்த முக கண்ணாடி அல்லது பிற கண்ணாடி பொருட்களை வைத்திருப்பது நல்லதல்ல. இது தவிர உடைந்த கடவுள்களின் சிலைகளையும் வீட்டில் வைத்திருப்பது கெட்டதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button