மருத்துவ குறிப்பு

உங்களுக்கு கண் அடிக்கடி அரிக்குதா? சூப்பரா பலன் தரும்!!

குளிர்ச்சியான நீரில் நனைத்த துணி

நமக்கு ஏற்படக்கூடிய பெரும் அசௌகரியங்களில் ஒன்று கண் அரிப்பு. கண் அரிக்க தொடங்கினால், வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதுபோன்ற தருணங்களில், ஒரு சுத்தமான துணியை குளிர்ந்த நீரில் நனைத்து கண்களின் மீது வைக்க வேண்டும். இது பழைய வைத்திய முறையென்றாலும் கூட, மிக சிறந்த ஒன்று. சோர்வு, தூசி போன்றவற்றால் ஏற்படக்கூடிய அரிப்புகளுக்கு இது மிகவும் சிறந்த தீர்வாகும். இது கண்களை நிதானமாக்கி, அரிப்பிலிருந்து விடுபட உதவிடும்.

கற்றாழை ஜூஸ்

 

சரும பராமரிப்பில் முக்கிய இடத்தை பிடிக்கும் கற்றாழை ஜெல்லானது, கண் அரிப்பிற்கு ஏற்ற மற்றொரு சிறந்த வைத்திய முறையாகும். மிக்ஸர் ஜாரில் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல், ஒரு ஜஸ் கட்டி துண்டு மற்றும் ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தயார் செய்ய கலவையை ஒரு பவுளில் ஊற்றி கொள்ளவும். சிறிது பஞ்சில் தயார் செய்ய குளிர்ந்த கற்றாழை கலவையை தொட்டு, கண்களின் மீது வைக்கவும். 2 முதல் 3 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்க, உடனடி பலன் கிடைக்கும்.

குளிர்ந்த பால் மற்றும் ரோஸ் வாட்டர்

 

பால் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டுமே சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கக்கூடியவை. கண் அரிப்பை போக்கவும் இவை சிறந்து உதவக்கூடியவை. அதற்கு, சரிசம அளவில் குளிர்ந்த பால் மற்றும் ரோஸ் வாட்டரை எடுத்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை, சிறிது பஞ்சில் தொட்டு கண்களின் மீது வைத்திருக்க, கண் அரிப்பு உடயே நீங்கி விடும்.

சீமைச்சாமந்தி சாறு

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கெமோமில் எனப்படும் மூலிகை குணம் நிறைந்த சீமைச்சாமந்தி பூவானது, பெரும்பாலும், தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது கண் அரிப்புக்கும் மிகச்சிறந்த தீர்வு என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை. உங்களால் முடியுமானால் சீமைச்சாமந்தி பூவையே பயன்படுத்தலாம் அல்லது சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது சீமைச்சாமந்தி தேநீர் பையை கூட தாராளமாக பயன்படுத்தலாம். மிகவும் சுலபமாக கிடைக்கக்கூடியது சீமைச்சாமந்தி தேநீர் பை ஆகும். கண் அரிப்பால் அவதிப்படுபவர்கள், சீமைச்சாமந்தி தேநீர் தயாரித்து, பயன்படுத்திய தேநீர் பையை உறை குளிர் நிலையில் வைக்கவும். பின்னர், அதனை எடுத்து கண்களின் மீது வைக்க கண் அரிப்பு போய்விடும்.

பெருஞ்சீரகம்

 

பெருஞ்சீரகம் அல்லது சோம்பு ஒரு புத்துணர்ச்சியூட்டக்கூடிய பொருள் மட்டுமல்ல. இது கண் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய சக்திவாய்ந்த வீட்டு வைத்திய முறையாகும். ஒரு கப் தண்ணீரில், ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பெருஞ்சீரக நீரை தயார் செய்து கொள்ளவும். தயாரித்த கலவை நன்கு ஆறி, குளிர்ந்த நிலைக்கு வந்த பிறகு, அந்த நீரை கொண்டு கண்களை கழுவவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button