Other News

பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறப்பவர்கள் யார் தெரியுமா?அப்படி என்ன ஸ்பெஷல்?

இற்தியாவில் பிரபலமான கைரேகை ஜோதிடம், தற்போது மக்கள் மத்தியில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றது. ஆம் கையில் இருக்கும் ரேகையினை வைத்து, பணவரவு, வாழ்க்கை, திருமணம், குழந்தைகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிகின்றது.

அதாவது எதிர்காலத்தினை குறித்து துல்லியமாக தெரிந்து கொள்ளமுடியாது என்றாலும் ஓரளவிற்கு கைரேகையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அதன்படி நமது கையில் இருக்கும் பணரேகை செல்வமும் அதிர்ஷ்டமும் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணரேகை
உங்களது கையில் நடுவிரலின் கீழ் உங்கள் உள்ளங்கையில், நேரான செங்குத்தான கோடு போன்று செல்லும் ரேகையே பணரேகை ஆகும்.

இந்த பணரேகையே பணம், வெற்றி மற்றும் செல்வத்தை குறிக்கின்றது. இந்த ரேகை ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தால் அவர்கள் வாழ்வில் பணத்தின் தட்டுப்பாடு இருப்பதில்லையாம்.

ஆனால் சிலருக்கு இந்த கோடு சில வளைவுகளாகவே, பல கோடுகள் இணைந்தோ இருக்கும் பட்சத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து வருமானம் வரும் என்று அர்த்தமாம்.

அதுமட்டுமின்றி நமது இரண்டு கைகளையும் ஒன்றினைக்கும் போது காணப்படும் அரைவட்ட ரேகையும், வாழ்க்கையில் தீவிர செல்வத்தின் வருகையை குறிக்குமாம்.

விரல்களின் கீழே இருக்கும் நீளமான ரேகையில் பிளவு ஏற்பட்டாலோ, அல்லது மறைந்திருந்தாலோ, பணத்துடன் நாம் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியாதாம். பல தடைகள், மற்றும் கடினமான உழைப்பு என அனைத்தையும் கடந்து வர வேண்டுமாம்.

உங்கள் ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையில் இரண்டு கோடுகள் உங்கள் கையில் வேறுபட்டு, ஒரு முக்கோணத்தை உருவாக்குகின்றன என்றால், நீங்கள் பிறக்கும் போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button