தமிழ் திரைப்பட பாடகி சின்மயி சமீபத்தில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தனது குழந்தையின் மகிழ்ச்சியை இணையத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
வாடகைத் தாய் குழந்தையைப் பெற்றெடுத்தாரா என்று பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். சின்மயி அதை கடுமையாக மறுத்து ஒரு பதிவை வெளியிட்டார்.
பல மோசமான கருத்துகளுக்கு சின்மயியும் பதிலடி கொடுத்துள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் என்றார்.
தற்போது நெட்டிசன் ஒருவர் வைரமுத்துவை ஒப்பிடுவதைப்போல், வைரம் மற்றும் முத்து சொன்னது அக்கா வைரமுத்து நினைச்சிட்டாங்க போல, எப்போ பாரு அதே நினைப்பு என நக்கலடித்துள்ளார்.
அதற்கு சின்மயி காட்டமாக, அவரை போலவே உங்கள் வீட்டில் பிள்ளைகள் பிறக்கட்டும், அவர் நினைப்பாகவே இருக்க உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு சின்மயிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். வைரலாகவும் பரவி வருகிறது.