Other News

இந்த 5 ராசி ஆண்களை தெரியாமகூட காதலிச்சிறாதீங்க… ஜாக்கிரதை…!

அனைத்து ஆண்களுமே உறவுகளின் தொடக்கத்தில் நல்லவர்களாகவும், மெனயானவர்களாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் பெண்களை புரிந்து கொள்வார்கள், அவர்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவார்கள், தங்களின் துணையின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வர அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அனைத்து ஆண்களும் இறுதிவரை இப்படியே இருப்பதில்லை.

தாங்கள் விரும்பும் பெண்கள் தங்களின் வாழ்க்கையில் நிரந்தர அம்சமாக மாறும் வரை அவர்கள் தங்கள் மோசமான பக்கத்தை மறைக்கிறார்கள். காலப்போக்கில் ஆபத்தானவர்களாகவும், நச்சுத்தன்மை உடையவர்களாகவும், ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் மாறுவார்கள். அனைத்து ஆண்களும் இப்படிப்பட்டவர்களாக இல்லையென்றாலும் குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த ஆண்கள் இப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

இந்த இராசிகளில் பிறந்த ஆண்கள் சவாலான மற்றும் அதே நேரத்தில் சுவாரஸ்யமானவர்கள். இருப்பினும், அவர்கள் உங்களை அடிக்கடி அழ வைக்கும் சுயநலப் பக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் எப்போதும் அவர்கள் விரும்புவதைப் பெற விரும்புகிறார்கள், உங்கள் கருத்து அவர்களுக்கு எப்போதும் ஒரு பொருட்டாக இருக்காது, ஏனென்றால் தங்கள் விஷயத்தில் யாரும் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் உணர்திறன் பக்கத்தை மறைத்து வைத்திருக்கும் போக்கைக் கொண்டுள்ளனர், மேலும் அவர்கள் நிச்சயமாக உங்களை புண்படுத்தும் மற்றும் கொடூரமான மனிதர்களில் ஒருவராக மாறலாம். அவர்களின் நடத்தை நச்சுத்தன்மை உடையதாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் மேலோட்டமாக பார்த்தால் மிகவும் அக்கறையுள்ள மற்றும் அன்பானவர்கள். அவர்கள் தங்களை இரக்கமுள்ளவர்களாகவும் பொறுமையானவர்களாகவும் சித்தரிக்கிறார்கள், ஆனால் அவர்கள் ஒரு வலுவான கையாளுதல் மற்றும் மேலாதிக்க பக்கத்தைக் கொண்டுள்ளனர். தங்களின் பாதுகாப்பற்ற உணர்வால் உறவை இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள துடிப்பார்கள். இதன் விளைவாக அவர்கள் காதலிக்கும் போது எப்படி இருந்தார்களோ, அதற்கு நேர்மாறாக மாறுவார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மிதுனம்

இந்த ராசி ஆண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி காதலிக்கிறார்கள். அவர்கள் ஒரு நட்பு மற்றும் நெகிழ்வான பக்கத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்கள் இருண்ட ஒரு பயங்கரமான முகமூடியை கொண்டவர்கள், இது அவர்களை உலகின் மிக மோசமான நபர் என்று அவர்களை உணர வைக்கும். அவர்கள் கோபமாக இருக்கும்போது இதயத்திலிருந்து சிந்திப்பது என்பதை மறந்து மோசமானவர்களாக மாறுகிறார்கள். இவர்களுடன் இருக்கும்போது மற்றவர்கள் சுவாசிக்கவே சிரமப்படுவார்கள் அந்த அளவிற்கு அவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வார்கள்.

கும்பம்

இந்த ராசிக்காரர்கள் புரட்சியாளர்கள். இவர்கள் கடினமானவர்கள் மற்றும் குளிர்ச்சியானவர்கள் மற்றும் விரைவில் வெகுதூரம் செல்லக்கூடியவர்கள். அவர்கள் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள், எனவே அவர்கள் முழுமையாக காதலில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். அவர்கள் தங்கள் நச்சு மனநிலையில் இருக்கும்போது அவர்கள் மிகவும் அவநம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் சந்தேக வலை எல்லைமீறி செல்லக்கூடியது.

கன்னி
கன்னி
காதலில் அவர்கள் ஆரம்பத்தில் சாதாரணமானவர்களாக தெரிவார்கள், ஆனால் காதல் உறுதியான பிறகுதான் அவர்களின் சுயரூபம் தெரியும். அவர்கள் விரும்பிய கவனத்தை ஈர்க்க எதையும் செய்வார்கள். அவர்களின் தீய மூளை ஆதிக்கம் செலுத்தவும், விரும்பியது கிடைக்கவும் என்ன வேண்டுமென்றாலும் சிந்திக்கும். அதற்காக அவர்கள் தங்கள் துணையை மனரீதியாக துன்புறுத்துத் தொடங்குவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button