முகப் பராமரிப்பு

சருமத்தின் கரும்புள்ளிகளை நீக்கும் பேக்கிங் சோடா

பெண்களுக்கு உள்ள பெரிய பிரச்சனைகளுள் ஒன்று முகத்தில் வரும் கரும்புள்ளிகள். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளுக்கு உடனடி தீர்வு தரக்கூடியது தான் பேக்கிங் சோடா பேக்கிங் சோடா அந்த கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகளை வேரோடு வெளியேற்றி, இறந்த செல்களையும் நீக்கிவிடும்.

* 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, உலர்ந்ததும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் சேர்த்து கலந்து, கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். உங்களுக்கு இப்பிரச்சனை அதிகம் இருந்தால், வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம்.

* பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வர, எலுமிச்சையில் உள்ள அசிட்டிக் அமிலம் விரைவில் கரும்புள்ளிகள் வெளியேறச் செய்யும். ஆனால் இம்முறை சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றதல்ல. – இந்த முறைகளில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை பயன்படுத்தி சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கலாம்.
7f0a4ff9 5918 4c25 acf7 38329f4235aa S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button