ஆரோக்கியம் குறிப்புகள்

எதிர்மறையான எண்ணங்கள் நீங்க வேண்டுமா? ஈஸியான பரிகாரம் இதோ

மனிதர்களாக வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவருக்குள் எதிர்மறையான எண்ணங்கள் அவ்வப்போது வந்து பிரச்சினையை ஏற்படுத்துவதை நாம் நன்கு உணர முடிகின்றது.

இத்தருணத்தில் உடல் மட்டும் சோர்ந்து போவதுடன், மனமும் வலிமையில்லாத உணர்வுகளை ஏற்படுத்துகின்றது. இவ்வாறான எதிர்மறையான எண்ணங்கள் எவ்வாறு தோன்றுகின்றது, அதன் அறிகுறிகள் மற்றும் அதற்கான பரிகாரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது ஏன்?
அனைத்து நேரங்களிலும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனல் பயம் ஏற்படுவதுடன், எந்தவொரு காரியத்தினை செய்வதற்கும் துணிச்சல் இல்லாமல் காணப்படுகின்றது.

இதன் அறிகுறிகள் உடல் சேர்வுடன் இருப்பதுடன், மனமும் பலவீனமாக காணப்படுகின்றது. எந்தவொரு வேலையிலும் ஆர்வம் இல்லாமல் காணப்படுவார்கள்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தலாம்?
உங்களைச் சுற்றி எதிர்மறையான ஆற்றல் அதிகரிப்பதற்கு முதன்மையான காரணம் மனம் தான். அதனால் எப்போதும் உங்களுடைய மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

நல்ல விதமான எண்ணங்களை உங்களுக்குள் கொண்டு வாருங்கள். ஒருவேளை உங்களையும் மீறி தொடர்ந்து ஏதேனும் எதிர்மறை எண்ணங்கள் உருவானால், அதைப் போக்குவதற்கு நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

நல்ல இசையைக் கேட்பதுடன், பணரீதியாகவோ, பொருள் ரீதியாகவோ மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்.

மேலும் வாழ்க்கையில் போராடி வெற்றிப் பெற்றவர்களின் வாழ்க்கைச் சரித்தரத்தை படிப்பது மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் திரைப்படங்களை பார்ப்பது உள்ளிட்டவை மனோபலத்தை வளர்த்தெடுக்கும் இதனால் எதிர்மறையான ஆற்றல் கட்டுபடுத்தப்படும்.

உங்களை சுற்றிவரும் எதிர்மறையான எண்ணங்கள் நீங்க வேண்டுமா? ஈஸியான பரிகாரம் இதோ | Negative Vibration Eliminating Simple Remedy

பரிகாரம் என்ன?
மனோபலம் இல்லாமல் இருப்பவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமை இரவுநேரங்களில் குறிப்பிட்ட பரிகாரத்தில் ஈடுபடலாம்.

ஒரு வாலியில் வெதுவெதுப்பான தண்ணீரை கால் பங்கு ஊற்றி, அது கை பொறுக்கும் சூட்டுக்கு வந்தவுடன் கல் உப்பு, ஒரு கைப்பிடி வேப்பில்லை, சிறுதுளி மஞ்சள் தூள், 2 அல்லது 3 மிளகு, மருதாணி விதைகள் உள்ளிட்டவற்றை சேர்க்க வேண்டும்.

தெய்வாம்சம் பொருந்திய இந்த பொருட்களை சேர்த்த பிறகு உங்களுடைய கால்களை அதற்கு மூழ்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி 20 நிமிடம் தொடர்ந்து செய்துவந்தால் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் ஆற்றல்கள் மறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button