சைவம்

மணத்தக்காளி விதை காரக்குழம்பு

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி விதை – 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சத்தூள் – சிறிது
உப்பு- தேவையான அளவு,
புளி – சிறிய எலுமிச்சை அளவு,
தேங்காய் – 2 சில்லு
வேர்க்கடலை – கொஞ்சம்
கடுகு – சிறிது
உப்பு – சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

* மணத்தக்காளி விதையை வாணலில் எண்ணெய் ஊத்தி வறுத்து எடுத்து வைக்கவும்.

* புளியை ஊற வைக்கவும், தேங்காய், வேர்க்கடலையை அரைத்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்த பின் பூண்டு போட்டு வதக்கவும்.

* பூண்டு வாசனை போனதும், வெங்காயம் போட்டு சிவக்க வதக்கவும்.

* அடுத்து அதில் நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லியை போட்டு வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

* தக்காளி நல்லா வதங்கினதும் மிளகாய் தூள், மஞ்சப்பொடி சேர்த்து சிறிது வதக்கிய பின் சிறிது தண்ணி, உப்பு சேர்த்து கொதிக்க விடுங்க.

* மிளகாய் தூள் வாசனை போனதும் ஊறவச்சிருக்கும் புளியை கரைச்சு சேர்க்கவும்.

* குழம்பு நல்லா கொதிச்சு புளி வாசனை போனதும் அரைச்சு வச்சிருக்கும், தேங்காய், முந்திரி, வேர்க்கடலை விழுதை போட்டு லேசா கொதிக்க விடவும். கொழம்பு கொதிச்சதும் வறுத்து வச்சிருக்கும் மணத்தக்காளி விதையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

* சுவையான மணத்தக்காளி கீரை விதை காரக்குழம்பு ரெடி.

30e3791b eaff 4740 8c6a 8138a74d5206 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button